சென்னை டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு ; போலீஸ் அதிரடி , குற்றவாளிக்கு நேர்ந்த கதி என்ன ?

1 month ago 3
ARTICLE AD
<p><strong>சென்னை டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு ; போலீஸ் அதிரடி நடவடிக்கை</strong></p> <p>சென்னை அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் வேல்முருகன் ( வயது 52 ) டெலிவரி ஊழியர். கடந்த 29 - ம் தேதி இரவு பணி முடிந்து, கொன்னுார் நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார்.</p> <p>அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர் , மொபைல் போனை பறித்து தப்பினார். அயனாவரம் போலீசாரின் விசாரணையில் திருட்டில் ஈடுபட்டது புளியந்தோப்பைச் சேர்ந்த பழைய குற்றவாளியான சந்தோஷ் ( வயது 21 ) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்ய முயலும் போது தப்ப முயன்று கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. விசாரணைக்கு பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.</p> <p><strong>தீபாவளி சீட்டு நடத்தி 13 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது.</strong></p> <p>சென்னை வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் ஈஸ்வரி ( வயது 34 ) இவர், செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி ( வயது 39 ) என்பவரிடம் தீபாவளி சீட்டு கட்டியுள்ளார். ஈஸ்வரி தன் உறவினர்கள் நண்பர்கள் என 97 பேரிடம் வசூல் செய்து, பரமேஸ்வரியிடம் மொத்தம் 15.12 லட்சம் ரூபாய் சீட்டு கட்டியுள்ளார்.</p> <p>கடந்த மாதம் சீட்டு முதிர்வடைந்த நிலையில் , பரமேஸ்வரியிடம் சீட்டு பணத்தை திரும்ப கேட்ட போது 1.76 லட்சம் ரூபாய் மட்டுமே திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள 13.36 லட்சம் ரூபாய் கொடுக்காமல் ஏமாற்றி தலைமறைவாகியுள்ளார்.</p> <p>ஈஸ்வரி உட்பட பாதிக்கப்பட்டோர், புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனரிடம் புகாரளித்தனர். எம்.கே.பி.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்குன்றத்தைச் சேர்ந்த பரமேஸ்வரியை கைது செய்தனர்.</p> <p><strong>பெற்றோர் சம்மதிக்காததால் , கோயிலில் திருமணம் செய்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த ஜோடி</strong></p> <p>சென்னையை அடுத்த கீழ்க்கட்டளையைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ( வயது 28 ) இவர், பரங்கிமலை தபால் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். அவருடன் பணிபுரியும் ஈரோடைச் சேர்ந்த வைஷ்ணவி ( வயது 26 ) என்பவரை, ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.</p> <p>காதல் விவகாரம் வைஷ்ணவியின் வீட்டிற்கு தெரிந்து, பெற்றோர் வேறு நபருடன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வைஷ்ணவி வடபழனி கோவிலில் விஸ்வநாத்துடன் திருமணம் செய்து கொண்டார்.</p> <p>பின், மடிப்பாக்கம் காவல் நிலையம் வந்து, பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் போலீசாரிடம் கூறினர். போலீசார் அறிவுரை கூறி காதல் ஜோடியை வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.</p> <p><strong>போலி ஆவணம் தயாரித்து ரூ.10 லட்சம் நில மோசடி - இருவர் கைது</strong></p> <p>மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் ( வயது 52 ) இவருக்கு நிலத்தரகர் செந்தில் மூலமாக எட்வர்ட் ராமச்சந்திரன் , ஜெயசீலன் ஆகியோர் பழக்கமாகி உள்ளனர். இவர்கள், 2024 - ல் திண்டிவனத்தில் 95 சென்ட் இடம் இருப்பதாக கூறி, இடத்தை காண்பித்து 1.50 கோடி ரூபாய் பேசியுள்ளனர்.</p> <p>பின்பு , முன்பணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று, கிரைய ஒப்பந்தம் செய்தனர். ஆவண நகல்களை முத்துக்குமார் சரிபார்த்த போது , போலி என்பது தெரிய வந்தது. எழும்பூர் நீதிமன்ற உத்தரவின்படி , கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து , மோசடியில் ஈடுபட்ட கொடுங்கையூர், காந்தி நகரைச் சேர்ந்த எட்வர்ட் ( வயது 52 )&nbsp; மாதவரம் பால்பண்ணையைச் சேர்ந்த ஜெயசீலன் ( வயது 57 ) ஆகியோரை கைது செய்தனர்.</p>
Read Entire Article