<p style="text-align: justify;">படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27.09.2025 சனிக்கிழமை அன்று விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி, பையனூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட உள்ளது. </p>
<h3 style="text-align: justify;">செங்கல்பட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்</h3>
<p style="text-align: justify;">இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.</p>
<p style="text-align: justify;">இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு மேற்கொண்டு மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரிய மற்றும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து தகவல்களை வேலையளிப்போரும் மற்றும் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தொடர்பான தகவல்களை வேலைநாடுநர்களும் பெறலாம். </p>
<h3 style="text-align: justify;">வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள தகுதிகள் என்ன ?</h3>
<p style="text-align: justify;">இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பி.இ / ஐடிஐ / டிப்ளமோ போன்ற கல்வித் தகுதி உடைய படித்து முடித்த வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.</p>
<p style="text-align: justify;">இதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்நகல்கள், சுய விவர குறிப்பு (பயோடேட்டா) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 27.09.2025, சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, பழைய மாமல்லபுரம் ரோடு, பையனூரில் உள்ளவிநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் - ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரியில், நடைபெறும் இம்முகாமில் நேரில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.</p>
<p style="text-align: justify;">இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு (Employment registration card) ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 044-27426020 9486870577 / 9384499848 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>