சிவகங்கை: TNPSC தேர்வு எழுத 8,749 பேர் தயார், முக்கிய அறிவிப்பு வெளியீடு! - தேர்வு நேரம், விதிகள் இதோ!

2 months ago 5
ARTICLE AD
<p>தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II&nbsp; மற்றும் தொகுதி- II A) தேர்விற்கென, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749&nbsp; நபர்கள் விண்ணப்பித்துள்ளனர் -&nbsp;மாவட்ட&nbsp; ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்</p> <div dir="auto"><strong>சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவலில்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வருகின்ற 28.09.2025&nbsp; (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல்&nbsp; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II&nbsp; (தொகுதி- II&nbsp; மற்றும் தொகுதி- IIA) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பெறும் தேர்வுக்கான அறிவிப்பு.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>தேர்வு நாள்</strong>:&nbsp; 28.09.2025 முற்பகல்</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டிய நேரம் </strong>:&nbsp; 9.00 மணி&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>விடைத்தாட்கள் (OMR Sheet)&nbsp; விநியோகிக்கும் நேரம் </strong>:&nbsp; 9.00 மணி</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>வினாத்தாட்கள் விநியோகிக்கும் நேரம்&nbsp; </strong>(<strong>Question Paper</strong>) :&nbsp; 9.15 மணி</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>தேர்வு ஆரம்பிக்கும் நேரம் </strong>:&nbsp; 9.30 மணி</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>தேர்வு முடியும் நேரம்</strong> : 12.30 மணி</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749&nbsp; மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">இத்தேர்விற்கென, சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 8,749&nbsp; மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்விற்கு&nbsp; சிவகங்கை மாவட்டத்தில்&nbsp; சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி ஆகிய 3 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில்&nbsp; சிவகங்கையில் 16 இடங்களிலும், தேவகோட்டையில் 04&nbsp; இடங்களிலும், காரைக்குடியில் 10 இடங்களிலும்&nbsp; தேர்வு நடைபெறவுள்ளது. அதுமட்டுமன்றி, இத்தேர்வு பணிக்கென 07 நடமாடும் குழுக்களும், 04 பறக்கும் படை குழுக்களும் அமைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">மேலும், தேர்வு மையத்திற்கு&nbsp; தேர்வாளர்கள் 9.00 மணிக்குள் வருகை புரியவேண்டும், 9.00 மணிக்கு மேல் வருகைபுரியும் தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமார்கள், எந்த தளர்வுகளும் கிடையாது எனவும், தேர்வெழுதச் செல்லும் தேர்வாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் (Hall Ticket ) மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வருகை புரியவேண்டும். அதுமட்டுமன்றி, செல்லுலார் போன்கள் (Cellular Phones), மின்னனு கடிகாரங்கள் (Electronic Watches), புளுடூத் சாதனங்கள் ( Bluetooth Devices),&nbsp; தகவல் தொடர்பு சாதனங்கள் (Communication chip), பிற மின்னணு சாதனங்கள் மற்றும் கைப்பைகள் ஆகியவைகள் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு&nbsp; போதுமான போக்குவரத்து வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&nbsp;&nbsp;</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">எனவே, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்&nbsp; நடத்தப்பெறும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு- II (தொகுதி- II மற்றும் தொகுதி- II A) தேர்வினை, தேர்வாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் எழுதிட வேண்டும் என சிவகங்கை மாவட்ட&nbsp; ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.<span style="font-family: 'arial narrow', sans-serif; font-size: xx-small;">&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</span></div>
Read Entire Article