சிபிஎஸ்இ பள்ளிகள் கையெழுத்து கேட்கும்; பெற்றோர் போடாதீங்க! எச்சரிக்கும் அன்பில் மகேஸ்

7 months ago 9
ARTICLE AD
<p>&nbsp;</p> <p>சிபிஎஸ்இ பள்ளிகளின் ஃபெயில் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.</p> <p>இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், &ldquo;சிபிஎஸ்இ 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் ஃபெயில் ஆக்கும் நடைமுறைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளின் இந்த நடைமுறையை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.</p> <p>இதனால் தான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறுகிறோம். ஆரம்பத்திலிருந்தே தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்றுதான் கூறி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் அமல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.</p> <p>சிபிஎஸ்இ பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் ஃபெயில் என்று கையெழுத்து போட சொன்னால் போடக்கூடாது. பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்.</p> <p>கடனை வாங்கி பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் சேக்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். 5ஆம் வகுப்பு மாணவர்களை ஃபெயில் ஆக்கினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.</p> <p>என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் மூலம் வரலாற்றை மாற்ற ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது&rdquo; எனத் தெரிவித்தார்.</p>
Read Entire Article