<p>ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.வான கே ரகுராம கிருஷ்ண ராஜு அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>தன்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி மீது ரகுராம கிருஷ்ண ராஜு புகார் அளித்த நிலையில், காவல்நிலையத்தில் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. </p>