கும்பமேளாவுக்கு சென்ற கார் டயர் வெடித்து விபத்து: 8 பேர் பலி ; எங்கே? எப்படி?

10 months ago 7
ARTICLE AD
<p>&nbsp;</p> <p>ஜெய்ப்பூரில் தடுப்புச் சுவரைத் தாண்டிச் சென்ற கார், பேருந்து மீது மோதியதில் கும்பமேளாவுக்குச் சென்ற 8 பக்தர்கள் உயிரிழந்தனர்.</p> <p>பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்குச் சென்று கொண்டிருந்தபோது ஜெய்ப்பூரில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.</p> <p>கார் ஒன்றில் 8 பேர் கும்பமேளாவில் நடைபெறும் ஆன்மிக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது ஜெய்ப்பூரில் உள்ள மோகம்பூரா அருகே தேசிய நெடுஞ்சாலை 48ல் சென்றுகொண்டிருந்தபோது கார் டயர் திடீரென வெடித்தது.</p> <p>இதில் நிலை தடுமாறிய கார் தடுப்புச்சுவரை தாண்டி அங்கு வந்து கொண்டிருந்த பேருந்து மீது மோதி விபத்திற்குள்ளானது.</p> <p>இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.</p> <p>மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p> <p>உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்வு பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.</p> <p>இதனிடையே மவுனி அமாவாசை அன்று பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.</p> <p>இந்த கூட்ட நெரிசல்களில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இதற்கு காரணம் உத்தரப்பிரதேச அரசின் நிர்வாகமின்மையே என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகின்றன.</p> <p>பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக அரசு தவறிவிட்டது எனவும் குற்றம் சாட்டுகின்றன.</p> <p>ஆனால் கும்பமேளா நிகழ்வு அவ்வளவு பெரிதுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை எனவும் எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தி காண்பிக்கின்றனர் எனவும் பாஜக தரப்பு விளக்கம் அளிக்கிறது.</p> <p>இத்தகைய சூழல் நடைபெற்று வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கும்பமேளாவில் பினித நீராடினார். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா நிகழ்வில் பிரதமர் மோடி நீராடினார்.</p> <p>இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.</p>
Read Entire Article