<p>கிறிஸ்தவப் பள்ளிகளில் மாணவிகளின் கூந்தல் வெட்டப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலான நிலையில் அதில் உண்மை இல்லை என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.</p>
<p>அந்த வீடியோ புற்றுநோயாளிகளுக்காக தலைமுடி தானம் செய்த வீடியோ எனவும் மதரீதியான வெறுப்பு, வதந்தியைப் பரப்ப வேண்டும் என்றும் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.</p>
<p><strong>இதுகுறித்து தமிழக அரசின் ஃபேக்ட் செக் பிரிவு கூறி உள்ளதாவது:</strong></p>
<p>’’கிறிஸ்தவப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவிகளின்‌ கூந்தலை வெட்டுவதாகப்‌ பள்ளிக் கல்வித்துறையைக்‌ குறிப்பிட்டு காணொளி ஒன்று சமூக வலைதளங்களில்‌ பரப்பப்பட்டு வருகிறது. இது முற்றிலும்‌ பொய்யான தகவல்‌.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="ta">புற்றுநோயாளிகளுக்காக தலைமுடி தானம் : மதரீதியான வெறுப்பு, வதந்தி!<a href="https://twitter.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw">@CMOTamilnadu</a> <a href="https://twitter.com/TNDIPRNEWS?ref_src=twsrc%5Etfw">@TNDIPRNEWS</a> (1/2) <a href="https://t.co/fi0B2HL0Hb">https://t.co/fi0B2HL0Hb</a> <a href="https://t.co/XKdGLhPhUS">pic.twitter.com/XKdGLhPhUS</a></p>
— TN Fact Check (@tn_factcheck) <a href="https://twitter.com/tn_factcheck/status/1833750443580620919?ref_src=twsrc%5Etfw">September 11, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>இந்தக் காணொளி கேரள மாநிலம்‌ செம்மணாரில்‌ உள்ள செயிண்ட்‌ சேவியர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ எடுக்கப்பட்டது. கடந்த 2019ஆம்‌ ஆண்டு 39 பள்ளி மாணவிகள்‌ புற்று நோயாளிகளுக்காக தங்கள்‌ தலைமுடியை தானம்‌ செய்தபோது எடுக்கப்பட்டதாக இந்த காணொளி சமூக வலைதளங்களில்‌ பகிரப்பட்டுள்ளது.</p>
<p>கேரளாவில்‌ புற்றுநோயால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு மாணவிகள்‌ தலைமுடியை தானம்‌ செய்த நிகழ்வில்‌ எடுக்கப்பட்ட காணொளியை வைத்து வதந்தி பரப்பி வருகின்றனர்‌.</p>
<p>மத வெறுப்பைத்‌ தூண்டாதீர்‌! வதந்தியைப்‌ பரப்பாதீர்‌!’’</p>
<p>இவ்வாறு தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.</p>