கர்நாடகா: மங்களூரு அருகே துர்கா பரமேஸ்வரி கோயில் திருவிழா! திடீரென தேர் கவிழ்ந்து விபத்து
1 year ago
17
ARTICLE AD
கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள புகழ்பெற்ற கோயில் பப்பநாடு துர்காபரமேஸ்வரி கோயிலில் தேர் வீதி உலாவின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. வருடாந்திர திருவிழாவில் நடைபெற்ற தேர் திருவிழாவின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருக்க அலங்காரம் செய்யப்பட்ட தேரின் மேற்பகுதி கழன்று விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.