கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழா; ஆற்றில் இருந்து ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கம்பம்

7 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;"><strong>கரூர் மாரியம்மன் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து ஊர்வலமாக கம்பம் கொண்டுவரப்பட்டு மாரியம்மன் ஆலயத்தில் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.</strong></p> <p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/12/897e91390ecb927d634a09b54de5c7ef1747036658246113_original.jpeg" width="720" /></p> <p style="text-align: left;">கரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி பெருவிழா கோலாகலமாக தொடங்கியது.&nbsp; &nbsp;இதை ஒட்டி மூன்று கொம்புகள் கொண்ட வேப்பமரம் பாரம்பரியமான முறையில் வெட்டி எடுக்கப்பட்டு காலையில் பாலம்மாள் புரம் பகுதியில் இருந்து மாரியம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.</p> <p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/12/4e8e2b1eeef860a599988f91dc4108d91747036685928113_original.jpeg" width="720" /></p> <p style="text-align: left;">அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அமராவதி ஆற்றிற்கு இரவு கொண்டு சென்று கம்பத்திற்கு வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் இரண்டு கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக &nbsp;கருப்பாயி கோயில் தெரு வழியாக ஜவஹர் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக &nbsp;மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று பின்னர் கம்பம் கோவில் உள்பிரகாரத்தில் நடப்பட்டது.&nbsp;</p> <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/12/e056dce7d03a11c24e961e27206ff8221747036710481113_original.jpeg" /></p> <p style="text-align: left;">வழி நெடுகிலும் &nbsp;ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கம்பத்தினை தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் வைக்கப்பட்ட கம்பத்திற்கு கரூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.</p>
Read Entire Article