கணவனை பக்கா ஸ்கெட்ச் போட்டு கொன்ற மனைவி..இன்ஸ்டா கள்ளக்காதலால் நடந்த கொடூரம்

5 months ago 4
ARTICLE AD
<p>வாணியம்பாடி அருகே கணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி உட்பட 5 பேரை கைது செய்து திம்மம்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். திருமணத்திற்கு மீறிய உறவை வைத்து கொண்டு &nbsp;இன்ஸ்டாகிராமில் &nbsp;பழகி இளைஞருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலிசார் விசாரணையில் அம்பலமானது.</p> <p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயனசெருவு பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெண்ணிலா என்பவருடன் திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ள நிலையில், &nbsp;கடந்த 17.03.2025 அன்று விஜயன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த போதே அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி வெண்ணிலா தெரிவித்துள்ளார்.</p> <p>இந்நிலையில் திம்மாம் பேட்டை போலீசார் விஜயனின் மரணத்தை &nbsp;சந்தேக மரணம் என &nbsp;வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், விஜயனின் மரணம் குறித்து &nbsp;பிரேத பரிசோதனை மருத்துவ அறிக்கையில் விஜயன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என &nbsp;மருத்துவ அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் &nbsp;வெளியாகி உள்ளது.</p> <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/01/8e237e3f013198ae095f973bb8bc64671751355283104113_original.jpeg" width="720" /></p> <p>இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் &nbsp;விஜயனின் உறவினர்கள் மற்றும் அவரது மனைவி வெண்ணிலாவிடம் &nbsp;தீவிர விசாரணை மேற்க்கொண்டு, வெண்ணிலா மற்றும் விஜயனின் செல்போன்களை ஆய்வு செய்து, வெண்ணிலாவிடம் போலீசார் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.</p> <p>விஜயனின் மனைவி வெண்ணிலா என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த சஞ்ஜெய் என்பவருடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.</p> <p>இந்நிலையில் சஞ்ஜெய் சிங்கப்பூர் சென்றுள்ளார் வெண்ணிலா சஞ்ஜெயுடன் வாழ ஆசைப்பட்டு, விஜயனை கடந்த 17.03.2025 அன்று &nbsp;அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த சபரிவாசன் அழகிரி, நாயனசெருவு பகுதியை சேர்ந்த சக்திவேல், நந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து வெண்ணிலா, விஜயனை கை, கால், கட்டி வைத்து தலையணையால், விஜயனின் முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்தது போலீசார் &nbsp;விசாரணையில் தெரியவந்தது.</p> <p>அதனை தொடர்ந்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக திம்மாம்பேட்டை போலீசார் &nbsp;மாற்றி விஜயனை கொலை செய்த அவரது மனைவி வெண்ணிலா மற்றும் கொலை உடந்தையாக செயல்பட்ட சக்திவேல், நந்தகுமார், சபரிவாசன், அழகிரி ஆகியோரை திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.</p> <p>மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி &nbsp;திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து &nbsp;கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Read Entire Article