கடைசி போட்டியில் சீறிய சென்னை.. சுயரூபத்தை காட்டிய ப்ரீவிஸ்.. தில்லாக ஆடுவாரா கில்?

6 months ago 5
ARTICLE AD
<p>கடைசி போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 230 ரன்களை குவித்துள்ளது. மாத்ரே தொடங்கி கான்வே, ப்ரீவிஸ் என அனைவருமே சிறப்பாக ஆடினார்கள்.&nbsp;</p> <h2><strong>கடைசி போட்டியில் சீறிய சென்னை:</strong></h2> <p><a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு தொடருக்கான தனது கடைசி லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டது.&nbsp;இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம். எஸ். தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.&nbsp;</p> <p>அதன்படி களத்தில் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக, மாத்ரே அதிரடியாக விளையாடினார். 17 பந்துகளில் 34 ரன்களை எடுத்த அவர் பிரசித் கிருஷ்ணா பந்தில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.&nbsp;</p> <h2><strong>சுயரூபத்தை காட்டிய ப்ரீவிஸ்:</strong></h2> <p>பின்னர் வந்த உர்வில் படேல், ஷிவம் துபே ஆகியோர் அதிரடியாக விளையாட ஒருமுனையில் கான்வே பொறுப்புடன் விளையாடினார். அரைசதம் கடந்த கான்வே 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இறங்கிய ப்ரீவிஸ், குஜராத் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தார்.&nbsp;</p> <p>20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 230 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ப்ரீவிஸ் 57 ரன்களை அடித்தார். குஜராத் அணிக்காக சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்றைய போட்டியில் 231 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றால் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும்.</p> <h2><strong>முதல் 2 இடம் யாருக்கு?</strong></h2> <p>நடப்பு தொடரில் பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜரத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. ஆனாலும், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இரண்டு வாய்ப்புகளை வழங்கக் கூடிய, புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிக்கப்போவது யார் என்பது தற்போது வரை உறுதியாகவில்லை.</p> <p>குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் அந்த இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து இரண்டு அணிகளும் தோல்வியுற்று ஷாக் அளித்தன. அதேபோல நேற்றைய போட்டியில், டெல்லி அணியிடம் பஞ்சாப் தோல்வியுற்றது. இதனால், முதல் 2 இடங்களை பிடிக்கப்போவது யார் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது.</p> <p>&nbsp;</p>
Read Entire Article