கடைசி இடம் வேணாம்! அசிங்கப்படாமல் தப்புமா மஞ்சள் படை? டாஸ் வென்ற ராஜஸ்தான்

7 months ago 5
ARTICLE AD
<p>டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.&nbsp;</p> <h2>அசிங்கப்படாமல் தப்புமா மஞ்சள் படை?</h2> <p>இரு அணிகளும் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையில், அடுத்த ஆண்டிற்கான பயிற்சி ஆட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. போட்டியின் முடிவுகள் பிளே-ஆஃப் கணக்குகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.</p> <p>அதேநேரம், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்க இன்றைய போடிட்யில் வெற்றி பெற வேண்டியது அவசியம். அப்படி வெற்றி பெற்றால் 9வது இடத்திற்கு முன்னேறக்கூடும். இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.</p> <p>அதில் சென்னை அணி 16 முறையும், ராஜஸ்தான் 14 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியில் அதிகபட்சமாக சென்னை 246 ரன்களையும், குறைந்தபட்சமாக 109 ரன்களையும் பதிவு செய்துள்ளது.</p> <h4><strong>சென்னை அணி விவரம்:&nbsp;</strong>ஆயுஷ்<em> மாத்ரே, டெவோன் கான்வே, உர்வில் படேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, தோனி(w/c), அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது.</em></h4> <p>நடப்பாண்டு <a title="ஐபிஎல்" href="https://tamil.abplive.com/sports/ipl" data-type="interlinkingkeywords">ஐபிஎல்</a> தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, டெல்லி அணிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.&nbsp;</p> <p>இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி நாளை வான்கடே மைதானத்த்தில் நடைபெற உள்ளது. இதில் மும்பை அணி வெற்றி பெற்றால், 16 புள்ளிகளை பெற்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். ஒருவேளை தோல்வியுற்றால், பஞ்சாப் அணிக்கு எதிரான தனது கடைசி போட்டியில் வெற்றி பெறுவதோடு, டெல்லி அணி தனது கடைசி லீக் போட்டியில் தோல்வியுற்றால் தான் மும்பையால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.</p> <p>டெல்லி அணியை பொறுத்தவரையில் தனக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெல்ல வேண்டும். இல்லையெனில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்று, மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோல்வி காண வேண்டும்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article