கடலூரில் ஆய்வு.. வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ளது.. ஆனால் அரசின் நிவாரணம் மிக குறைவு - அண்ணாமலை
1 year ago
16
ARTICLE AD
ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தை சேர்ந்த வட மாவட்டங்களான விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடலூரில் வெள்ள பாதிப்பு பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.