<p>ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார்.</p>
<p><strong>ஜனநாயக கடமையாற்றிய தோனி: </strong></p>
<p>பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜார்க்கண்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மற்றும் இந்தியா பிளாக் கூட்டணி இடையே நேரடி போட்டி நிலவுகிறது.</p>
<p>ஆட்சியை தக்க வைக்க இந்தியா கூட்டணியும் ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. காலை 7 மணியில் இருந்தே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 59.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.</p>
<p>இந்த நிலையில், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள வாக்குச்சாவடியில் மகேந்திர சிங் தோனி, தனது மனைவி சாக்சியுடன் வந்து வாக்களித்துள்ளார். </p>
<p> </p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/BreakingNews?src=hash&ref_src=twsrc%5Etfw">#BreakingNews</a> <br /><br />Star cricketer MS Dhoni along with his wife, Sakshi arrives at a polling booth in Ranchi to cast his vote for <a href="https://twitter.com/hashtag/JharkhandAssemblyElections2024?src=hash&ref_src=twsrc%5Etfw">#JharkhandAssemblyElections2024</a> <a href="https://t.co/QVbX2AxT4n">pic.twitter.com/QVbX2AxT4n</a></p>
— Surbhi (@SurrbhiM) <a href="https://twitter.com/SurrbhiM/status/1856636843695264127?ref_src=twsrc%5Etfw">November 13, 2024</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<p>முதற்கட்ட வாக்குப்பதிவான இன்று 43 தொகுதிகளில் 609 ஆண்கள், 73 பெண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தக் கட்டத்தில் 6 அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய தலைவர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் உள்ளிட்டோரும் அடங்குவர். </p>
<p> </p>