ஒரே குடும்பத்தில் 3 பேர் படுகொலை - துளியும் பயமில்லை - திமுக அரசை போட்டுத்தாக்கும் இபிஎஸ் 

1 year ago 7
ARTICLE AD
<p>திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.&nbsp;</p> <p>இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், &ldquo;திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.</p> <p>திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை தடுக்க இங்கு ஒரு ஆட்சி இருக்கிறதா? இல்லையா?" என்ற அச்சமிகு கேள்வியை மக்களிடத்தில் எழுப்புகின்றன.</p> <p>தமிழ்நாட்டை குற்றவாளிகளின் சொர்க்கபூமியாக மாற்றியிருக்கும் திரு. ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.</p> <p>இக்கொலையில் தொடர்புள்ள அனைவரையும் கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சட்டம் ஒழுங்கைக் காக்க இனியாவது செயல்படுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்&rdquo; எனத் தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="ta">திருப்பூர் மாவட்டம் பொங்கலூர்- சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் மூவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.<br /><br />திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு துளியும் பயமில்லை. இந்த ஆட்சியில் நடக்கும் தொடர் குற்றங்கள், "இவற்றை&hellip;</p> &mdash; Edappadi K Palaniswami - Say No To Drugs &amp; DMK (@EPSTamilNadu) <a href="https://twitter.com/EPSTamilNadu/status/1862365751812006348?ref_src=twsrc%5Etfw">November 29, 2024</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>முன்னதாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியூள்ளது. சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் சிகாமணி, அம்லமாத்தாள் என்ற வயதான தம்பதி தனது தோட்டத்து வீட்டில் தங்கி வசித்து வந்தனர். இவர்களது மகன் செந்தில். இவர் தனது மனைவி மகன், மகளுடன் கோவையில் வசித்து வருகிறார்.&nbsp;</p> <p>இந்நிலையில் செந்தில் நேற்று தனது தாய் தந்தையுடன் தங்கியிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 3 பேரையும் கொலை செய்துள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். நடைக்காக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.&nbsp;</p>
Read Entire Article