<p style="text-align: left;">சபரிமலை கோவில் நடைதிறக்கப்படும் முதல் நாளே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். <span class="HwtZe" lang="ta"><span class="jCAhz ChMk0b"><span class="ryNqvb">உலகப்புகழ்பெற்ற இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். ஐயப்பனை தரிசிப்பதற்காக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு மண்டலம் எனும் 48 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடித்து, இருமுடி கட்டி சபரிமலை சன்னிதானத்துக்கு வருவது வழக்கம். </span></span></span></p>
<p style="text-align: left;"><span class="HwtZe" lang="ta"><span class="jCAhz ChMk0b"><span class="ryNqvb"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/24/dfd2016f7355707eee4527d1e8a985861750740952300739_original.JPG" width="720" /></span></span></span></p>
<p style="text-align: left;"><span class="HwtZe" lang="ta">மற்ற கோவில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோவிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். <span style="font-weight: 400;">சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். குறிப்பாக மாதாந்திர பூஜைக்காகவும் ஓணம், விஷு, பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு தினங்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவது கூடுதல் சிறப்பு.</span></span></p>
<p style="text-align: left;"><span class="HwtZe" lang="ta"><span class="jCAhz ChMk0b"><span class="ryNqvb">அதேபோல சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மலையாள மாத தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுவது வழக்கம். </span></span></span>இதற்கான பிரதிஷ்டை வரும் ஜூலை மாதம் 13- ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக சபரிமலை நடை 11-ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் சுத்திக்கிரியைகள் நடைபெறும். ஜூலை 12- ம் தேதி பிரதிஷ்டைக்கு முன்னோடியான பூஜைகள் நடைபெறும். 13 -அதிகாலை கணபதி ஹோமம், உஷ பூஜை, மரப்பாணி ஆகிய சடங்குகளுக்கு பின்னர் காலை 11:00 முதல் 12:00 மணிக்குள் நவக்கிரக கோயில் பிரதிஷ்டை நடைபெறும்.</p>
<p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/24/c13a342dfc6f95804828bfe7b1d88fe11750740918492739_original.JPG" width="720" /></p>
<p style="text-align: left;">அன்று இரவு சபரிமலை நடை அடைக்கப்படும். அதன் பின் ஜூலை 16- மாலை ஆடி பூஜை களுக்காக நடை திறக்கப்படுகிறது. ஜூலை 11 முதல் 13- வரை <a title="சபரிமலை" href="https://tamil.abplive.com/topic/sabarimala" data-type="interlinkingkeywords">சபரிமலை</a>யில் தரிசனத்திற்கு ஆன்லைன்முன்பதிவு நேற்று தொடங்கியது. இந்த மாதாந்திர பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற விரும்பும் பக்தர்கள், தரிசனத்திற்கு<strong> sabarimalaonline.org.in</strong> என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: left;"> </p>