ஏழாம் ஆண்டாக அன்னதானம்.. வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் நெகிழ்ச்சி !

6 days ago 2
ARTICLE AD
<p>வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக அம்மா பேரவையின் சார்பில் 10,000 பேருக்கு அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்&nbsp; வழங்கினார்.</p> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>வைகாசி விசாகம்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக அம்மா பேரவையின் சார்பில் பழங்காநத்தில் நடைபெற்றது. இதற்குரிய ஏற்பாட்டினை கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல்&nbsp; செய்திருந்தார். அன்னதானத்தினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் வழங்கினார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்&zwnj;.எஸ் .சரவணன், முன்னாள் மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, நெல்லை பாலு உட்பட பலர் பங்கேற்றனர்.</div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto"><strong>அன்னதான நிகழ்வில் ஆர்.பி.உதயகுமார்</strong></div> <div dir="auto">&nbsp;</div> <div dir="auto">அன்னதானத்தை வழங்கி ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது...," வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாளாகும் இந்த தினத்தில் அறுபடைவீடுகளில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, பால் காவடி, வேல் காவடி, மயில் காவடி மற்றும் வேல்,அலகு குத்தி நேத்திகடனை செலுத்துவார்கள். தற்பொழுது திருப்பரங்குன்றத்தில் அதிகாலை முதல் பக்தர்கள் தங்களை நேத்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.&nbsp;கழக அம்மா பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நகரியிலும், அதே போல வைகாசி விசாகத்தை முன்னிட்டு பழங்காநத்திலும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது தற்போது ஏழாம் ஆண்டாக வழங்கப்பட்டு வருகிறது.&nbsp;இந்த வைகாசி திருநாளில் எடப்பாடியாரின் பெயரில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நிச்சயம் தமிழகத்தில் எடப்பாடியாரின் தலைமையில் அம்மா ஆட்சி மலரும் என கூறினார்.</div>
Read Entire Article