"எங்கள் தலைவா... தலைமை ஏற்க வா" – அண்ணாமலை பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்...

5 days ago 2
ARTICLE AD
<p class="isSelectedEnd">தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.</p> <p class="isSelectedEnd">அண்ணாமலையின் பிறந்தநாள் வருகிற ஜூன் 4-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் பா.ஜ.க. தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, "எங்கள் தலைவா தலைமை ஏற்க வா" என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டர்கள் கோவை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.</p> <p class="isSelectedEnd">பா.ஜ.க. முன்னாள் கோவை மாநகர் தலைவரும், உத்தம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனருமான உத்தம பாலாஜி ராமசாமி தலைமையில் இந்த போஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிங்காநல்லூர், அவிநாசி சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் அண்ணாமலையின் படங்களுடன் இந்த விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.</p> <p class="isSelectedEnd">அண்ணாமலை மீண்டும் தமிழக அரசியலில் முக்கிய தலைமைப் பொறுப்பை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் என்ற ஆதரவாளர்களின் விருப்பத்தையும் எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த வாசகங்கள் இடம்பெற்றுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p> <p class="isSelectedEnd">கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டதன் பின்னர், மாவட்ட தொண்டர்களுக்கும் அவருக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுவடைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே அவரது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.</p> <p>மேலும், இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம், பா.ஜ.க. வட்டாரத்தில் மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Read Entire Article