"உள்நாட்டு தொழில்நுட்பங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்" அஜித் தோவல் பேச்சு

5 months ago 5
ARTICLE AD
<p>நாடு அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் ஐஐடி மெட்ராசின் 62-வது பட்டமளிப்பு விழாவில் இன்று தலைமை விருந்தினராக பங்கேற்று பேசிய அவர், தற்போதைய தலைமுறையினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறினார்.</p> <h2><strong>ஐஐடி மெட்ராஸ் பட்டமளிப்பு விழா:</strong></h2> <p>இந்தத் தலைமுறையினர் தங்கள் திறமைகளை நாட்டின் முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். விரைவான வளர்ச்சியை எட்டி வரும் இந்தச் சூழலில், கல்வி நிறுவனங்களும் தங்களது கட்டமைப்புகளை மேம்படுத்தி வருவதாகத் தெரிவித்தார்.</p> <p>சென்னை ஐஐடி-யைப் பொருத்தவரை இதன் முன்னாள் மாணவர் சங்கம், உலகளாவிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.</p> <p>மாணவர்களின் திறன்கள், பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்லாமல், சமூகத்திற்கு சேவை செய்வதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இந்தியா வளமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்த எதிர்காலம் மாணவர்களை நம்பியே உள்ளது என்றும் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.</p> <h2><strong>"உள்நாட்டு தொழில்நுட்பங்களை அதிக அளவில் உருவாக்க வேண்டும்"</strong></h2> <p>இந்தப் பட்டமளிப்பு விழாவில் பேசிய, ஐஐடி மெட்ராசின் இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி, சென்னை ஐஐடி, கியூஎஸ் உலகத்தரவரிசையில் 47 இடங்கள் முன்னேறி 180-வது இடத்தை எட்டியுள்ளது என்று குறிப்பிட்டார். வலுவான தொழில்துறை ஆதரவுடன், இந்த நிறுவனம், தேசிய மற்றும் சர்வதேச நிதியுதவியுடன் பல்வேறு தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.</p> <p>&nbsp;</p> <blockquote class="twitter-tweet"> <p dir="ltr" lang="en"><a href="https://twitter.com/hashtag/TamilNadu?src=hash&amp;ref_src=twsrc%5Etfw">#TamilNadu</a> | NSA Ajit Doval at IIT Madras Convocation<br /><br />&ldquo;Operation Sindoor showcased India&rsquo;s self-reliant strength,&rdquo; said NSA Ajit Doval during the 62nd convocation of IIT Madras in Chennai.<br /><br />He revealed that India successfully struck 9 to 10 targets deep inside Pakistan within&hellip; <a href="https://t.co/pWTtdk2reP">pic.twitter.com/pWTtdk2reP</a></p> &mdash; DD News (@DDNewslive) <a href="https://twitter.com/DDNewslive/status/1943583468241182852?ref_src=twsrc%5Etfw">July 11, 2025</a></blockquote> <p> <script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script> </p> <p>இந்தப் பட்டமளிப்பு விழாவில் 3,227 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவிற்கு பின்னர், ஐஐடி மெட்ராஸ், வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அறிவுசார் மையத்தை அஜித் தோவல் திறந்து வைத்தார்.</p> <p>&nbsp;</p>
Read Entire Article