உப்பு சத்தியாகிரக நினைவூட்டல்: தஞ்சையில் யாத்திரை குழுவுக்கு உற்சாக வரவேற்பு

1 month ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">தஞ்சாவூா்: தஞ்சாவூரில் உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குழுவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குழுவினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.&nbsp;</p> <p style="text-align: justify;">திருச்சியிலிருந்து வேதாரண்யத்திற்கு &nbsp;உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குழுவினர் ஆண்டுதோறும் நினைவு யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டுக்கான 96- ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை குழுவினர் திருச்சியில் இருந்து யாத்திரையை தொடங்கினர்.&nbsp;</p> <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/2edb6e4652b8d3299d064b165e357d571777449196301733_original.jpg" /></p> <p style="text-align: justify;">உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவு குழுத் தலைவரும், யாத்திரை குழுத் தலைவருமான சக்தி செல்வகணபதி தலைமை வகித்தார் . உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இந்த யாத்திரையை முன்னாள் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் மன்னை. மதியழகன் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p> <p style="text-align: justify;">இதையடுத்து திருச்சியிலிருந்து யாத்திரை குழுவினர் பல்வேறு ஊர்களின் வழியாக தஞ்சாவூருக்கு வந்தடைந்தனர். தொடர்ந்து யாத்திரை குழுவுக்கு தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மகேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.&nbsp;</p> <p style="text-align: justify;">இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ், சேவாதள மாநிலத் துணைத் தலைவர் திருஞானம், &nbsp;இலக்கியப் பிரிவு கலைச்செல்வன் , மாரியம்மன் கோவில் வட்டாரத் தலைவர் குமாரசாமி, மாவட்ட துணைத் தலைவர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் சாந்தா ராமதாஸ், மகளிர் அணி தலைவி மும்தாஜ் பேகம், கோட்டத் தலைவர்கள் தேவா, பி&zwnj;.எம். சரவணன், பாலகிருஷ்ணன், ஒ.எம். சரவணன், ஜாபர் அலி, வார்டு தலைவர் மதிவாணன் , நிர்வாகிகள் சரவணன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.&nbsp;</p> <p style="text-align: justify;">இதையடுத்து யாத்திரை குழுவினர் தஞ்சையில் இருந்து புறப்பட்டு நெடார், அய்யம்பேட்டை, பாபநாசம், கும்பகோணம் , வலங்கைமான் ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சென்றனர். &nbsp;தொடர்ந்து கோட்டூர், திருத்துறைப்பூண்டி வழியாக வேதாரண்யம் சென்று யாத்திரையை நிறைவு செய்கின்றனர்.</p> <p style="text-align: justify;">1930 மார்ச் 12 முதல் ஏப்ரல் 6 வரை மகாத்மா காந்தி தலைமையில் ஆங்கிலேயரின் உப்பு வரிக்கு எதிராக நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டமே தண்டி உப்பு சத்தியாகிரகம் ஆகும். சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி கடற்கரை வரை 240 மைல்கள் (சுமார் 390 கி.மீ) நடைபயணமாகச் சென்று, சட்டவிரோதமாக உப்பு எடுத்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது நாடு தழுவிய சிவில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தூண்டியது.&nbsp;</p> <p style="text-align: justify;">24 நாட்கள் நடந்த இந்த நடைபயணத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுகிலும் இணைந்து காந்தியை ஆதரித்தனர்.<br />ஏப்ரல் 6, 1930 அன்று காந்தி தண்டியில் உள்ள கடல் நீரில் காய்ச்சிய உப்பை கையில் எடுத்து, பிரிட்டிஷ் உப்புச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக உடைத்தார். இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் உப்பு சத்தியாகிரகத்தைத் தூண்டியது மற்றும் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய போராட்டமாக மாறியது.&nbsp;</p> <p style="text-align: justify;">காந்தியின் தண்டி யாத்திரையைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையில் 1930 ஏப்ரல் மாதம் திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு, உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
Read Entire Article