இளைஞர்கள்தான் குறி.... பொது இடங்களில் விற்பனை படு ஜோர் - காவல்துறை ந‌ட‌வ‌டிக்கை எடுக்குமா..?

1 year ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;">மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு&nbsp; அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.</p> <p style="text-align: justify;"><a title=" CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!" href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-cm-mk-stalin-ungalil-oruvan-scheme-will-inspect-the-work-in-virudhunagar-on-november-9-10-206057" target="_blank" rel="noopener"> CM MK Stalin: கோவையில் ஓவர்; அடுத்து விருதுநகர் மக்கள் ரெடியா! - பக்கா திட்டங்களுடன் வரும் முதல்வர் ஸ்டாலின்!</a></p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/07/5361ae1d350982a7467a20d4a95e83681730981001566739_original.JPG" width="720" height="459" /></p> <p style="text-align: justify;">தொட&zwnj;ர் விடுமுறை ம&zwnj;ற்றும் வார&zwnj; விடுமுறை நாட்களில் ஏராளமான&zwnj; சுற்றுலா ப&zwnj;ய&zwnj;ணிக&zwnj;ள் வ&zwnj;ருவ&zwnj;து வ&zwnj;ழ&zwnj;க்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை &nbsp;பெரும்பால&zwnj;னோரை ர&zwnj;சிக்க&zwnj; வைக்கிற&zwnj;து, போதைப்பழக்கத்திற்குள்ளானவர்கள்&nbsp; க&zwnj;ஞ்சா ம&zwnj;ற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்ப&zwnj;னையும் அத&zwnj;னை ப&zwnj;ய&zwnj;ன்ப&zwnj;டுத்துவோரின் எண்ணிக்கையும் த&zwnj;ற்பொழுது அதிக&zwnj;ரித்துள்ள&zwnj;து, சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா &nbsp;பயணிகளை குறிவைத்து&nbsp; இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.</p> <p style="text-align: justify;"><a title=" Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்" href="https://tamil.abplive.com/crime/thanjavur-crime-father-commits-suicide-after-hanging-his-4-year-old-daughter-205996" target="_blank" rel="noopener"> Crime: 4 வயது மகளை தூக்கில் தொங்கவிட்ட தந்தை... தஞ்சையில் நடந்த கொடூரம்</a></p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/07/06a63309dfbebca438aa31a230e36f6f1730981018318739_original.JPG" width="720" height="459" /></p> <p style="text-align: justify;">இதற்கு இன்னொரு பெயர் மேஜிக் மஷ்ரூம் (தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.&nbsp;&nbsp; கொடைக்கானல் கே.ஆர்.ஆர் கலையரங்கம், செட்டியார் பூங்கா, சின்ன பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் வெளிப்படையாக போதைகாளான் விற்பனை செய்வதால் வெளிமாநிலத்தோர்க்கு போதை காளான் விற்பனையும் படுஜோராக நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.&nbsp;</p> <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/07/24ec864c6e4533123a084ba84e1178e01730980851896739_original.JPG" width="720" height="459" /></p> <p style="text-align: justify;"><a title=" &rdquo;திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..&rdquo; : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி.." href="https://tamil.abplive.com/news/thanjavur/deputy-cm-udhayanidhi-stalin-says-many-people-want-to-destroy-dmk-tnn-206052" target="_blank" rel="noopener"> &rdquo;திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..&rdquo; : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..</a></p> <p style="text-align: justify;">இந்த போதை பொருளின் பாதிப்புகள் தெரியாம&zwnj;ல் இளைஞ&zwnj;ர்க&zwnj;ள் பலர் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை இழ&zwnj;ந்து விடுகின்ற&zwnj;னர்,&nbsp; போதைகாளான் போன்ற போதை பொருள்க&zwnj;ளினால் உட&zwnj;லில் ப&zwnj;ல்வேறு பாதிப்புக&zwnj;ளும் ஏற்ப&zwnj;ட்டு ப&zwnj;ல&zwnj;ரும் உயிரிழ&zwnj;ந்தாக&zwnj;வும் கூற&zwnj;ப்ப&zwnj;டுகின்ற&zwnj;து. கொடைக்கனல் சுற்றுலா தலங்கள் உட்பட அதனை சுற்றியுள்ள கிராமங்கள் என போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவ&zwnj;ல்துறை சார்பில் ப&zwnj;ல்வேறு நட&zwnj;வ&zwnj;டிக்கைக&zwnj;ள் எடுக்க&zwnj;ப்ப&zwnj;ட்டாலும் போதை பொருள் விற்ப&zwnj;னை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது போன்ற போதைவ&zwnj;ஸ்துக்க&zwnj;ளை விற்ப&zwnj;னை செய்வோரை க&zwnj;ண்ட&zwnj;றிய&zwnj;வும், பொது இட&zwnj;ங்க&zwnj;ளில் விற்ப&zwnj;னையில் ஈடுபடுவோர் மீது காவ&zwnj;ல்துறை க&zwnj;டும் ந&zwnj;ட&zwnj;வ&zwnj;டிக்கை எடுக்க&zwnj;வேண்டுமென&zwnj; கோரிக்கையும் எழுந்துள்ளது.</p> <p style="text-align: justify;">&nbsp;</p>
Read Entire Article