<h3 dir="ltr">இளைஞருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவு</h3>
<p dir="ltr">திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பெரியகுளம் தெருவை சேர்ந்தவர் 26 வயதுடைய முத்துப்பட்டன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p dir="ltr">முத்துப்பட்டன் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் சுதா வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து வந்துள்ளார். அப்போது சுதாவிற்கும் பக்கத்துக்கு வீட்டை சேர்ந்த திருமணமதாக வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.</p>
<h3 dir="ltr"><strong>அதிர்ச்சி அடைந்த கணவன்</strong></h3>
<p dir="ltr">முத்துப்பட்டன் வீட்டில் இல்லாத நேரத்தில் வெளியே சுற்ற வாலிபருடன் தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பேசி வந்த நிலையில் மனைவி குறித்து அறிந்த முத்துப்பட்டன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.</p>
<p>மேலும் இது குறித்து மனைவியிடம் கேட்ட போது கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவ்வப்போது தகராறு நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் காலை வழக்கம் போல வேலைக்கு சென்று மீண்டும் இரவு வீடு திரும்பிய போது வீட்டில் சுதா இல்லை என சொல்லப்படுகிறது. எனவே முத்துப்பட்டன் சுதாவை அருகில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் தேடி வந்த நிலையில் அவர் தொடர்பில் உள்ள வாலிபர் வீட்டில் இருந்து வெளியே வந்ததாக தெரிகிறது.</p>
<h3><strong>மனைவியின் தலையை துண்டித்த கணவன் </strong></h3>
<p>இதனை பார்த்து ஆத்திரமடைந்த முத்துப்பட்டன் மனைவி சுதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியின் தலையை தனியாக துண்டித்து சாலையில் வைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குற்றச்சாட்டில் தொடர்புடைய முத்துப்பட்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அம்பாசமுத்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது</p>