இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்லவை நடக்குமா? ஜோதிட நிபுணரின் விளக்கம்!

1 year ago 7
ARTICLE AD
<p>அன்பார்ந்த abp நாடு வாசகர்களே&nbsp; கனவுகளைப் பற்றி விளக்க வேண்டும் என்றால் அது&nbsp; மருத்துவராலேயே சரியாக முடியாது.&nbsp; கனவுகள் ஆழ்மனதின் எண்ணங்கள்.&nbsp; ஒரு கனவு வருகிறது என்றால்&nbsp; அந்தக் கனவில் இடத்தையோ பொருளையோ&nbsp; நபர்களையும் நம்மால் தீர்மானம் செய்ய முடியாது&nbsp; நம் எண்ணங்கள் தான் அவற்றைத் தீர்மானம் செய்ய வேண்டும்.</p> <p>&nbsp;ஒரு கனவின் இடத்தை எண்ணங்கள் எப்படி&nbsp; முடிவு செய்கின்றன என்பதை அறிஞர்களாலோ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முடியாது. சரி முன்னோர்கள் கனவில் வந்தால் என்ன பலன் என்பதை பற்றி ஆராயலாம்.&nbsp; முன்னோர்கள் யார்&nbsp; ரத்த சொந்தம்.&nbsp; முன்னோர்களின் விதைகள் தான் நாம்.&nbsp; ஆனால் உங்களுடைய தாத்தாவுக்கு பாட்டிக்கோ அல்லது முன்னோர்களுக்கு&nbsp; தனிப்பட்ட மூளை செயல்பாடுகள் இருக்கும் அவர்கள் உங்கள் ரத்த சொந்தமாக இருக்கலாம் ஆனால்&nbsp; யோசிக்கின்ற விதம் என்பது நிச்சயமாக வெவ்வேறாக மட்டுமே இருக்கும்&nbsp;</p> <p><strong>ஆபத்து வருவதை முன்கூட்டியே உணர்த்தும் கனவு:</strong></p> <p>உங்களுக்கு ஏதேனும் ஆபத்து வரப்போகிறது என்று வைத்துக் கொண்டால் ஒரு விதமான அதிர்வுகளால் நீங்கள் ஏற்கனவே பிடிக்கப்பட்டு இருப்பீர்கள்.&nbsp; அந்த அதிர்வுகளை உங்களால் உணர முடியாது. ஆனால், சித்தர்களும் ரிஷிகளும் உங்களுக்கு கெட்ட நேரம் வருகிறது என்பதை அவர்களால் உணர முடியும். உங்கள் உடம்பிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு விதமான எதிர்மறை ஆற்றல் உங்களுக்கான நேரம் சரியில்லாததை காட்டும்.&nbsp; நீங்கள் தூங்கும் பொழுது உங்களுடைய அனைத்து எண்ணங்களும்&nbsp; அமைதியான நிலைக்கு சென்ற பின்பு,&nbsp; ஆழ் மனது விழித்த்திருக்கும். எதிர்மறையான எண்ணங்களை பொறுத்தவரை ஆழ்மனது எப்படி உங்களுக்கு வெளிப்படுத்த முடியும்? கனவு வாயிலாக தான் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.</p> <p><strong>முன்னோர்கள் கனவில் வருகிறார்களா?</strong></p> <p>&nbsp;கனவில் முன்னோர்கள் தோன்றி உங்களுக்கு வர இருக்கின்ற பிரச்சனைகளை குறித்து அவர்கள் சொல்ல முயற்சிப்பார்கள் அல்லது ஏதேனும் ஒரு சம்பவங்கள் வாயிலாக உங்களுக்கு உணர்த்த முயற்சிப்பார்கள்.&nbsp; இப்படியான சூழ்நிலையை நீங்கள் புரிந்து கொண்டு முன்னோர்கள் உங்களுக்கு கனவில் என்ன கூற வருகிறார்கள் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டால் ஒழிய நடக்கவிருப்பதை உங்களால் கணிக்க முடியாது.&nbsp; முன்னோர்கள் கனவில் வரும் போது அவை தீயவை என நடக்கும் அல்லது நல்லவையாக நடக்கும் என்பது இல்லை. எப்படியும் சம்பவங்கள் நடைபெறலாம்.</p> <p>&nbsp;எனக்குத் தெரிந்த எத்தனையோ நண்பர்கள் கனவின் மூலமாக வருவதை உணர்கிறார்கள்.&nbsp; கிட்டத்தட்ட அவர்கள் உணர்வதும் வாழ்க்கையில் நடப்பதும் சமமாக தான் இருக்கிறது. சிலருக்கு பிடிக்காத நபர்கள் முன்னோர்களாக கனவில் வரும்போது அவர்களுக்கு எதிர்மறையான சம்பவங்கள் வாழ்வில் நடைபெறலாம் .&nbsp; உங்களுக்கு பிடித்த முன்னோர்கள் கனவில் வரும் பொழுது வாழ்க்கையில் வசந்த காலம் போல நல்ல சம்பவங்களாக கூட நடைபெறலாம்.&nbsp; ஆன்மீகப் பாதையில் நீங்கள் செல்லும்போது கனவில் மூலம் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஒன்றும் உங்களை செய்து விட முடியாது.</p> <p>&nbsp;நல்ல ஆத்மாக்கள் எப்பொழுதும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.&nbsp; அப்படிப்பட்ட நல்ல ஆத்மாக்கள் உங்களின் முன்னோர்கள். எனவே கனவில் முன்னோர்கள் வருவதன் மூலம் உங்களுக்கு தீமை ஒருபோதும் நடக்காது என்பதை கணிப்பு.</p> <hr /> <p>&nbsp;</p>
Read Entire Article