இருதார அமைப்பு யாருக்கு...? என்ன பரிகாரம்!!!

3 months ago 7
ARTICLE AD
<p>உங்களின் ஏழாம் பாவகம் கெட்டிருந்தால், நீச்சமாக இருந்தால் அல்லது பகை பெற்று இருந்தால்... &nbsp;மிக கடினமான போராட்டம் உள்ள ஒரு திருமண வாழ்க்கை தான் உங்களுக்கு அமையும். &nbsp;அது முதல் திருமணத்தைப் பற்றி மட்டும் சொல்லும். &nbsp; உதாரணத்திற்கு மீன லக்னம் &nbsp;ஏழாம் அதிபதி &rsquo;புதன்&rsquo; &nbsp;லக்னத்திலேயே நீச்சமடைந்திருக்கிறார் என்று வைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நிம்மதியாக வாழ முடியாது. &nbsp;விவாகரத்து ஆகும் என்று நான் கூறவில்லை... ஆனால் நிம்மதியான வாழ்க்கை இருப்பது மிக மிகக் கடினம். &nbsp;ஒருவேளை அந்த வாழ்க்கைத் துணை அவரை விட்டுவிட்டு வேறு மாநிலத்திலோ, வேறு நாட்டிற்கோ சென்றுவிட்டால் விவாகரத்து பெறாமல் வாழலாம். &nbsp;ஆனால் ஒன்றாக வாழும் பொழுது &nbsp;பல சங்கடங்களை ஜாதகர் அனுபவித்து ஆக வேண்டும். &nbsp;ஒருவேளை மீன லக்கினம் ஏழாம் அதிபதி புதன் நிச்சம் பெற்று லக்னத்தில் அமரும்போது &nbsp;உடன் சுக்கிரன் உச்சம் பெற்று இருந்தால். &nbsp;நிச்சயமாக &nbsp;ஏதோ ஒரு வகையில் &nbsp;வாழ்க்கையை சமாளித்துக் கொண்டு அப்படியே ஓட்டி விடலாம் &nbsp;ஆனால் நீச்சபங்க ராஜயோகம் கிடைக்காத பட்சத்தில் &nbsp;நிச்சயமாக &nbsp;மனம் முறிவு ஏற்படலாம் சிலருக்கு விவாகரத்து கூட ஆகலாம்.</p> <p>&nbsp; இதற்கு பரிகாரம் உண்டா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது ஒரு மனிதன் அவர் ஜாதகத்தில் இருப்பதை வாழ்நாளில் அனுபவித்து ஆக வேண்டுமே தவிர &nbsp;அதற்கு காரணம் தேடவோ அல்லது பரிகாரம் தேடவோ நிச்சயமாக முடியாது. அப்படி எவ்வளவு பணத்தை செலவு செய்து பரிகாரம் செய்தால் கூட &nbsp;அவை பலிப்பது இல்லை என்பது தான் என்னுடைய அனுபவ கருத்து. &nbsp; &nbsp; முதல் திருமணம் சரியாக அமையவில்லை இரண்டாவது திருமணம் ஆவது எப்படி இருக்கும் என்று கேட்கிறவர்களுக்கு &nbsp;அடுத்ததாக என்னுடைய பதில் &nbsp;உங்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் இருந்து எண்ணி பதினோராம் வீட்டை பாருங்கள்.</p> <p>&nbsp; 11-ம் வீடு:</p> <p>&nbsp; ஏழாம் பாவகம் கெட்டிருந்து ஏழாம் அதிபதியும் வலுவிழந்து இருந்தால் &nbsp;அவருடைய 11 ஆம் பாவத்தை பார்க்க வேண்டும் ஒரு வேலை 11 ஆம் பாவகம் மிக வலிமையாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு இரண்டாம் திருமணம் சாத்தியப்படும். &nbsp; அந்த வாழ்க்கை அவருக்கு நன்றாக அமைந்து எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்லும். &nbsp;முதல் திருமணம் &nbsp;வெற்றிகரமாக முடியாதவர்கள் பரிகாரம் செய்து பின்பு திருமணம் செய்வார்கள், அந்த திருமணம் வெற்றிகரமாக அமைந்து விடும் அவர்கள் &nbsp; நினைப்பது பரிகாரம் செய்ததால் தான் 2வது திருமணம் வெற்றி ஆனது என்று ... &nbsp;ஆனால் &nbsp;ஜாதகத்திலேயே இரண்டாம் திருமணத்திற்கான பாவகம் 11 மிக வலிமையாக இருந்ததால் அவருக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைந்தது என்று கூறலாம்.</p> <p>&nbsp; வம்பு வழக்குகளில் திருமணம் :</p> <p>&nbsp; பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த &nbsp;சில திருமணங்கள் &nbsp;நீதிமன்றம் வரை சென்று போராடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயமாக &nbsp;எவ்வளவு போராடினாலும் விவாகரத்து ஆகியே தீரும். &nbsp;ஒருவேளை வாகரத்து ஆனால் &nbsp;பதினோராம் பாகம் வலிமையாக இருந்தால்... தாராளமாக நீங்கள் வழக்குகளில் போராடாமல்... ஒரு நல்ல ஜோதிடரை அணுகி &nbsp;ஆக வேண்டிய அடுத்த காரியத்தை பார்க்கலாம். &nbsp; இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு முதல் திருமணத்திலேயே வழக்குகள் வரை போய் அவை நின்று நல்லபடியான முதல் திருமணம் &nbsp;வாழ்க்கை வாழ்ந்தவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் &nbsp;சரியான ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதகத்தின் படி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு பின்பு செயல்படுத்துங்கள் .&nbsp;&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article