"இனி போலீஸாருக்கு 2 நாள் லீவ்.. குடும்பத்தினருக்கு ஹேப்பி!" - அரசின் அதிரடி விடுமுறை அறிவிப்பு

1 month ago 5
ARTICLE AD
<p style="text-align: left;">தெலங்கானாவில் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று காவலர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர பிற நாட்களில் விடுமுறை வழங்கவும் அதிகாரிகளுக்கு காவல்துறை உத்தரவிட்டுள்ளது.&nbsp;</p> <p style="text-align: left;">நமக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும், நீதி வேண்டி முதலில் போலீசாரை அணுகுவோம். ஆனால், அந்த போலீசார் வழக்கு சம்பந்தமான வேலைகளில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுக்கும் வாய்ப்பு இருக்காது. அவர்களின் வாழ்க்கையில் சிறப்பு சந்தர்ப்பங்களிலும் கடமை செய்து குடும்பத்தை விட்டு விலகி இருக்கிறார்கள். இந்த நிலையில், தெலங்கானா மாநில போலீஸ் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு டிஜிபி பி. சிவதர் ரெட்டி ஒரு இனிப்பான செய்தியை வழங்கினார். இனி ஒவ்வொரு போலீஸ் அதிகாரியும் தங்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் சிறப்பு விடுமுறை பெறும் வகையில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். இதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பிரிவு போலீசாருக்கும் விடுமுறை வழங்க வேண்டும் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">&nbsp;</p> <p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/5-IRG6idMn0?si=bdtdrqwXo5Nn4Kzw" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p> <p style="text-align: left;">தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் நலனையும், அவர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சிவதர் ரெட்டி தெரிவித்தார். தொழில் ரீதியான அழுத்தத்தைக் குறைத்து, தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பளிப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம். இதன் மூலம் போலீசாரிடையே மனமகிழ்ச்சி அதிகரிப்பதோடு, குடும்ப உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.</p> <p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/37dee558ffc81700963e034df93d015a1777339814622233_original.jpeg" width="720" /></p> <p style="text-align: left;">இருப்பினும், இந்த விடுமுறையைப் பெற விரும்புவோர் முன்கூட்டியே விண்ணப்பித்து, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அவசர காலங்களில் தவிர, மற்ற நேரங்களில் இந்த விடுமுறைகளை கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் நலனுக்காக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு போலீஸ் துறை ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.&nbsp;</p> <p style="text-align: left;"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/food/how-to-fix-excess-salt-in-food-cooking-tips-257623" width="631" height="381" scrolling="no"></iframe></p> <p style="text-align: left;">&nbsp;</p> <p style="text-align: left;">&nbsp;</p>
Read Entire Article