இந்தியா - அமீரகம் 'மெகா' டீல்: 3 கோடி பேரல் கச்சா எண்ணெய் சேமிப்பு..5 பில்லியன் டாலர் முதலீடு!

2 weeks ago 4
ARTICLE AD
<p data-path-to-node="1">இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் ஐக்கிய அரபு அமீரகம்&nbsp; ஒரு "முக்கிய பங்குதாரர்" என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அபுதாபி பயணத்தைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய், எல்என்ஜி (LNG) மற்றும் எல்பிஜி&nbsp; விநியோகம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் ஒரு விரிவான எரிசக்தி கூட்டாண்மையை முன்னெடுக்க ஒப்புக்கொண்டுள்ளன.</p> <p data-path-to-node="2">அபுதாபியில் பிரதமர் மோடி மற்றும் அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற விரிவான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவின் உத்திசார்ந்த பெட்ரோலிய இருப்பு மையங்களில் (Strategic Petroleum Reserve) 30 மில்லியன் பேரல் வரை கச்சா எண்ணெயை சேமித்து வைக்க ஐக்கிய அரபு அமீரகம் சம்மதம் தெரிவித்துள்ளது.</p> <p data-path-to-node="3">மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி&nbsp; வழியாக தடையற்ற மற்றும் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தின் முக்கியத்துவத்தையும் இரு நாட்டுத் தலைவர்களும் வலியுறுத்தினர்.</p> <p data-path-to-node="4"><strong data-path-to-node="4" data-index-in-node="0">மூலோபாய கூட்டு ஒப்பந்தம்</strong></p> <p data-path-to-node="5">இது தொடர்பாக இந்திய மூலோபாய பெட்ரோலிய இருப்பு நிறுவனம் மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம்&nbsp; இடையே ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெட்ரோலிய இருப்பு மையங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்களிப்பு 30 மில்லியன் பேரல்களாக உயர்த்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.</p> <p data-path-to-node="6">மேற்காசியாவில் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ள தற்போதைய சூழலில், இந்த நடவடிக்கை இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் மூலோபாய எரிவாயு இருப்பு மையங்களை அமைப்பதற்கும், நீண்டகால எல்பிஜி விநியோகத்திற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் அட்னாக் (ADNOC) இடையே தனி ஏற்பாட்டிற்கும் இரு நாடுகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.</p> <p data-path-to-node="7"><strong data-path-to-node="7" data-index-in-node="0">பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு</strong></p> <p data-path-to-node="8">எரிசக்தித் துறைக்கு அப்பால், வங்கி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி ஆகிய துறைகளில் இந்தியாவில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. இது தவிர பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, கப்பல் கட்டுதல் மற்றும் மேம்பட்ட கணினித் துறைகளிலும் புதிய ஒப்பந்தங்கள் எட்டப்பட்டுள்ளன.</p> <p data-path-to-node="9">மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அமீரகம் மீதான தாக்குதல்களுக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, அந்நாட்டு தலைமை மற்றும் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்பதையும் பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்.</p> <p data-path-to-node="10">பிராந்திய மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான கப்பல் பாதைகளில் போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை எழுந்துள்ள நிலையில், பிராந்திய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பான வர்த்தக வழித்தடங்கள் மற்றும் வலுவான பொருளாதார ஒத்துழைப்பின் அவசியத்தை இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்த சந்திப்பின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.</p> <p data-path-to-node="10"><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/which-fruit-should-not-be-eaten-raw-260376" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article