<p style="text-align: justify;"><strong>கரூர் சின்ன ஆண்டான் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகுண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: center;"><strong><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/7a3b2e82038fab8e414b19e9179e67f31724120723033113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டான் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் முடிகொண்டு அருள் பாலித்து வரும்</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/edb4670bdda626d9063017f4a41863c21724120750826113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப்பெடி, அரிசி மாவு, பண்ணீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக தீர்த்த மாரியம்மனுக்கு பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/4a2f5ce76cf60c13c47e81d35124c0ae1724120931286113_original.jpeg" /><br />பின்னர் சுவாமிக்கு பட்டாளை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்த பிறகு தீர்த்த மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு உதிரியாள் உதிரிப்பூக்களால் நாமவளிக்க கூடிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதிய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
<p style="text-align: center;"><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/042e154203111bcd2eedd4715f84d8eb1724120955329113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">கரூர் சின்ன ஆண்டாள் கோவில் ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி பௌர்ணமி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர். </p>
<p style="text-align: center;"><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/7a9d3f8f0e543dd29dd058d068b41a1c1724120763311113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"><strong>கரூர் ஒத்தையூர் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி திருக்கோவிலில் ஆவணி பௌர்ணமியை முன்னிட்டு மூலவர் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம்.</strong></p>
<p style="text-align: center;"><strong><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/c80695acea402a9af58e678f15289b1f1724120993405113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">ஆவணி மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி திருக்கோவிலில் மூலவர் பெருமாளுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாற, திருமஞ்சள், மஞ்சள் ,சந்தனம், பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக நடைபெற்றது.</p>
<p style="text-align: center;"><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/33dafcd9b22b97d3b6c5dd08447fee471724121010568113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பின்னர் மூலவர் ரெங்கநாத ஒப்பிலியப்பருக்கு சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் பூசாரி சுவாமிக்கு துளசியால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
<p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/20/efc536869b89d0c865eefa66bb9966461724121036599113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூர் அருள்மிகு ஸ்ரீ ரெங்கநாதர் ஒப்பிலியப்பன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேக மற்றும் அலங்கார நிகழ்ச்சியை காண சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>