<h2 style="text-align: left;">ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா</h2>
<p style="text-align: left;">தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர்வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.</p>
<p style="text-align: left;">ஆடி தமிழ் மாதம் தெய்வங்களுக்கான மாதமாக கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பில் இருந்து ஆடி இறுதி வரை ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் கோவில்களில் நடத்தப்படுகின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் தொடங்குகின்றன. புகழ்[பெற்ற பல்வேறு கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்வர்.</p>
<p style="text-align: left;">ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆயிரம் மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 2,000 பக்தர்கள் கட்டணமின்றி ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.</p>
<p style="text-align: left;">இந்த ஆன்மிக பயணம் 5 கட்டங்களாக (வருகிற ஜூலை 18, 25, மாதம் 01, 08 மற்றும் 15 ஆகிய தேதிகளில்) தொடங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை www.hrce.tn.gov.in என்கிற இணையத்தில் பதிவிறக்கம் செய்து ஜூலை 11ம் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.</p>
<h2 style="text-align: left;">ஆன்மிக பயணம் கோயில்களின் விவரம்</h2>
<p style="text-align: left;">சென்னையில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயில், பாரிமுனை காளிகாம்பாள் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும், திருச்சி மண்டலத்தில் உறையூர் வெக்காளியம்மன் கோயில், உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோயில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், சமயபுரம் உஜ்ஜையினி மாகாளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.</p>
<p style="text-align: left;">அதேபோல் மதுரையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளியம்மன் கோயில், அழகர்கோவில் ராக்காயியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களையும், தஞ்சாவூர் மண்டலத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் வராகியம்மன் கோயில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சியம்மன் கோயில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களையும், திருநெல்வேலி மண்டலத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.</p>
<h2 style="text-align: left;">தமிழகம் ஆன்மீக புத்துணர்ச்சியின் சிறந்த ஆதாரம்</h2>
<p style="text-align: left;">உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் ஆன்மீக புத்துணர்ச்சியின் சிறந்த ஆதாரமாக இருந்து வருகிறது. மாநிலத்தில் 33,000 பழமையான கோயில்கள் உள்ளன. மத வழிபாட்டுத் தலங்களுக்கான யாத்திரை மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர்வாசிகளுக்கு மகத்தான பொருளாதார ஆதாயங்களையும் கொண்டு வருகிறது. பெரும்பாலான கோவில்கள் சிவன், விஷ்ணு மற்றும் அவர்களது துணைவியார்களை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயில்கள், அவற்றின் வடிவமைப்பு மற்றும் சிற்பங்களால் மட்டுமல்ல, அவற்றின் வளாகத்தில் பக்தி, நடனம், பாடல், பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் விருந்துகள் போன்ற நிலையான செயல்பாடுகளால் அறியப்படுகின்றன.</p>
<p style="text-align: left;">தமிழகத்திற்கு மேலும் அழகு சேர்த்தவர்கள் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் விஜயநகரம் போன்ற அந்நாள் ஆட்சியாளர்கள். கி.பி 700 இல், தமிழகத்தின் மிகச்சிறந்த பழமையான கோவில்களை செதுக்கிய சிறந்த ஆட்சியாளர்களில் பல்லவர்கள் முதன்மையானவர்கள். கற்களால் கோயில்களை செதுக்குவதில் அவர்களின் சிறப்பு இருந்தது. கி.பி.900க்குப் பிறகு ஆட்சி செய்த சோழர்களின் காலம், கோபுரங்கள், மண்டபங்கள் அமைத்து அழகுபடுத்த வேண்டும் என்பதே அவர்களின் கோயில்களின் எண்ணமாக இருந்தது. விஜயநகரம் மற்றும் நாயக்கர்கள் பாணி, சன்னதிக்கு அருகில் நுழைவாயில் வளைவுகள், பிரமாண்டமான தூண்கள் மற்றும் வளைந்த பாதைகள் ஆகியவற்றின் மூலம் கலை முன்னோக்கி கொண்டு வந்தனர்.</p>
<p style="text-align: left;">மயிலை கபாலீஸ்வரர், சிதம்பரம் நடராஜர்; மீனாட்சி கோவில், மதுரை; ராமேஸ்வரம் கோவில்; பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர்; கும்பகோணம்; மாரியம்மன் கோவில், சமயபுரம்; வேளாங்கண்ணி; நாகூர் தர்கா; திருச்செந்தூர் முருகன் கோவில்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்; பழனி; பாபநாசம்; ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவில், சங்கரன்கோவில்; அருணாச்சல கோவில், திருவண்ணாமலை மற்றும் குமரியம்மன் கோவில், கன்னியாகுமரி ஆகியவை தமிழ்நாட்டின் பிரபலமான யாத்திரை தலங்களாகும்.</p>