ஆசை வார்த்தை கூறி பெண்கள் இளம் வேலைக்கு தேர்வு !! போதை பொருட்கள் கொடுத்து பாலியல் தொழில்

1 month ago 7
ARTICLE AD
<p><strong>ஆசை வார்த்தை கூறி வேலைக்கு தேர்வு</strong></p> <p>மத்திய பிரதேசம் போபாலில் அப்​பாஸ் நகரில் உள்ள ஒரு சிறிய பகு​தி​யில் வசித்து வந்​தவர்​கள் அம்​ரின் மற்​றும் அப்ரின். சகோதரி​களான இவர்​கள் பொருளா​தார ரீதி​யில் பின் ​தங்​கிய இளம் பெண்​களை குறி​ வைத்து அவர்​களுக்கு இலவச தங்​குமிடம் உணவுடன் மாதம் ரூ.10,000 சம்​பளம் தரு​வ​தாக ஆசை​ வார்த்தைகளை கூறி வேலைக்கு தேர்வு செய்​துள்​ளனர்.</p> <p>இதையடுத்து அவர்​களை பாலியல் தொழிலில் ஈடு​படுத்​தி​யதுடன், கட்​டாய மதமாற்​ற​மும் செய்​துள்​ளனர். இது தொடர்பாக 21 மற்​றும் 32 வயதுடைய இரு பெண்​கள் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு பாக் செவானியா காவல் நிலை​யத்​தில் அளித்த புகாரின் அடிப்​படை​யில் அம்​ரின் மற்​றும் அப்​ரின் மற்​றும் அவர்​களுக்கு உதவி​யாள​ராக செயல்​பட்ட சந்​தன் யாதவ் ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​தனர்.</p> <p><strong>பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்</strong></p> <p>இந்த வழக்​கில் தலைமறை​வாக உள்ள பிலால், சானு மற்​றும் யாசிர் ஆகிய மூவர் தேடப்​பட்டு வரு​கின்​றனர். இளம் பெண்​களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சட்​ட​ விரோத​மாக கிடைத்த பணத்​தின் மூல​மாக அவர்​கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்​ததை காவல்​ துறை​யினர் உறுதிப்படுத்தி உள்ளனர்.</p> <p><strong>பாதிக்​கப்​பட்ட இரண்டு பெண்​கள் அளித்த புகாரில் கூறி​யுள்​ள​தாவது ;&nbsp;</strong></p> <p>ஏழ்​மை​யில் இருந்த எங்​களுக்கு வேலை ​தரு​வ​தாகக் கூறி மெல்ல பார்ட்​டி , பப் , லாஞ்சுக்கு அழைத்து அங்கு சென்று செல் வந்​தர்​களு​டன் ஒன்​றாக இருக்க வற்​புறுத்தினர். மது , எம்டி போதைப் பொருட்களை கொடுத்து சுயநினை​வற்ற நிலை​யில் இருந்​த​ போது நாங்​கள் வன்கொடுமைக்கு ஆளானோம்.</p> <p>இதே போன்​று, சத்​தீஸ்​கரை சேர்ந்த பெண் கடந்த டிசம்​பர் 2025 - ல் வேலை நிமித்​த​மாக அகம​தா​பாத் அழைத்​துச் செல்​லப்​பட்ட போது அங்கு அம்​ரினின் உறவினர் யாசிர் என்​பவ​ரால் வன்​கொடுமை செய்​யப்​பட்டார். மற்​றொரு பெண் சந்​தன் யாதவ் என்​ப​ரால் பாலியல் கொடுமைக்கு ஆளானார். வெளியே சொன்​னால் கொலை செய்​து​ விடு​வ​தாக அம்​ரின், அப்ரின் ஆகியோர் மிரட்​டினர். இவ்​வாறு புகாரில் கூறப்​பட்​டுள்​ளது.</p> <p>அம்​ரின் , அப்​ரின் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்து அவர்​களின் போன்​களை ஆய்வு செய்​த​ போது பல இளம்​பெண்களின் புகைப் ​படங்​கள் அடங்​கிய வாட்​ஸ்​ அப் குழுக்​கள் கண்​டறியப் பட்டுள்ளன.</p> <p>பாதிக்​கப்​பட்ட பெண்​கள் குஜ​ராத் மற்​றும் மும்பை என இரு மாநிலங்​களுக்கு அழைத்துச் செல்​லப்​பட்​ட​தால் இதில் மிகப் ​பெரிய நெட்​வொர்க் சம்​பந்​தப்​பட்​டிருக்கலாம் என்ற சந்​தேகம் உள்​ளது. இதையடுத்து இவ்​வழக்கில் வி​சா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.</p>
Read Entire Article