<h3><strong>ஆசை வார்த்தை கூறி சிறுமி கடத்தல்</strong></h3>
<p>போளூர் தாலுகாவில் கிராம பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி மற்றும் அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் மாதம் தோறும் வந்தவாசி சேத்துப்பட்டு சாலையில் உள்ள சைதானி பீவி தர்காவிற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாஷாவின் மனைவி பாத்திமா ( வயது 30 ) அதே தர்காவிற்கு சென்று வந்துள்ளார்.</p>
<p>இதில் தான் தர்காவிற்கு வந்து செல்லும் அந்த 14 வயது சிறுமியிடம் பாத்திமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாத்திமா 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஆற்காட்டிற்கு பேருந்தில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.</p>
<p>பின்னர் பாத்திமாவின் கணவர் இம்ரான் பாஷா( வயது 35 ) மற்றும் அவரது தம்பியான கிளீனர் அஜ்மல் பாஷா ( வயது 30 ) ஆகிய இரண்டு பேரும் 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி லாரியில் ஆற்காடு பகுதியில் இருந்து பெங்களூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது லாரியில் பெங்களூர் செல்லும் வரை இரண்டு 2 பேரும் சேர்ந்து சிறுமியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.</p>
<h3><strong>பொதுமக்கள் தர்ம அடி</strong></h3>
<p>லாரி பெங்களூர் பகுதி சென்று நின்றவுடன் லாரியில் இருந்து சிறுமி இறங்கி அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் சென்றுள்ளார். அவர்களிடம், தன்னை அழைத்து வந்த அந்த இரண்டு பெரும் சேர்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார்.</p>
<p>அதன் பின்னர் பொது மக்கள் இரண்டு பேருக்கும் தர்ம அடி கொடுத்து பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் போலீசார் வந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்று சம்பவம் குறித்து விசாரணை செய்துள்ளனர்.</p>
<p>இதையடுத்து பெங்களூர் போலீசார் வந்தவாசி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் பெங்களூர் போலீசார் 14 வயது சிறுமியை மகளிர் பாதுகாப்பு இல்ல விடுதியில் பொது மக்கள் உதவியுடன் தங்க வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதையடுத்து பெங்களூரில் இருந்து வந்தவாசி போலீசார் சென்று சிறுமியை அழைத்து வந்து, வந்தவாசி காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றியுள்ளனர். பின்னர் வந்தவாசி போலீசார் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இம்ரான் பாஷா மற்றும் அவரது தம்பி அஜ்மல் பாஷா சிறுமியை அழைத்து செல்வதற்கு உடந்தையாக இருந்த இம்ரான் பாஷாவின் மனைவி பாத்திமா ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டு வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.</p>