<p style="text-align: left;">தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகர்கோவில், சிவகங்கை, தஞ்சாவூர், தென்காசி, திருப்பூர், ராணிப்பேட்டை, திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் இடைநிலை, தனியார் பள்ளிகள், தொடக்கக் கல்வி மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர். இதேபோல் ராமநாதபுரம், நீலகிரி, தர்மபுரி, சேலம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/15/5d937e4dff2371b687da556735d12b091752570958299739_original.JPG" width="720" /></p>
<p style="text-align: left;">தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இந்த கலாந்தாய்வை பொறுத்தவரை எமிஸ் தளம் வழியாக வெளிப்படையாகவே நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் கடந்த ஜூலை 2 ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் ஜூலை 30 வரை அந்தந்த மாவட்டங்களில் நடக்கிறது. பணியிட மாறுதல் கோரி 38 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளின்படி, பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.</p>
<p style="text-align: left;">அரசுப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:" தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 2,342 பேர் கொண்ட தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p style="text-align: left;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/07/15/55014de74a9db984506ae256f3748a711752570930107739_original.JPG" width="720" /></p>
<p style="text-align: left;">இவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு சென்னையில் நடத்தப்பட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களின் வீட்டு முகவரியுடன்கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.' முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்</p>
<p style="text-align: left;">ஆகவே ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும் நேரத்துக்கு முன்பாகவே மையத்துக்கு வருகை புரிய வேண்டும். தாமதமாக வருபவருக்கு அந்த நேரத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுசெய்து கொள்ள அனுமதிக்கப்படும். இதையடுத்து, பணிநியமனம் பெறுபவருக்கு முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்குவார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 23-ம் தேதி நடைபெறும்" இவ்வாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.</p>