"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!

1 year ago 7
ARTICLE AD
<p>இந்தியாவின் வளர்ச்சியில் ஒவ்வொரு தனிநபரையும் உள்ளடக்குவதை நோக்கமாகக் கொண்ட "அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் முயற்சி, அனைவரின் நம்பிக்கை" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தில் மாற்றுத் திறனாளிகளின் பங்கு முக்கியம் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.</p> <p><strong>"சமமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்"</strong></p> <p>ஒவ்வொரு நபருக்கும், அவர்களின் பின்னணி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், சமமான வாய்ப்புகள், உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.</p> <p>ஹரியானா மாநிலம் குருகிராமில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 11-வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளிகளின் திறமைகளை வெளிப்படுத்த இந்த தளம் ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என்று கூறினார்.</p> <p><a title="Kanguva: சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?" href="https://tamil.abplive.com/entertainment/actor-suriya-kanguva-movie-release-amazon-prime-ott-know-details-here-209083" target="_blank" rel="noopener"><strong>Kanguva:</strong> சூர்யா ரசிகர்களே! அமேசான் ப்ரைமில் ரிலீசானது கங்குவா - OTTயில் வெற்றி பெறுமா?</a></p> <p>இதுபோன்ற முயற்சிகள் நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார். மாற்றுத் திறனாளிகளின் சிறப்புத் திறன்களை எடுத்துரைத்த மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மாற்றுத் திறனாளிகளின் திறமைகளை வெளிக்கொணர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.</p> <p><strong>மக்களவை சபாநாயகர் கூறியது என்ன?</strong></p> <p>இந்த நிகழ்ச்சியில், அரசியலமைப்பின் பிரெய்லி பதிப்பையும் ஓம் பிர்லா மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார். பங்கேற்பாளர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்த தேசிய அபிலிம்பிக் போட்டி வழிவகுக்கிறது என்றும் ஓம் பிர்லா குறிப்பிட்டார்.</p> <p>இந்தியா ஒரு சமத்துவ சமூகமாக மாற, மாற்றுத்திறனாளிகளை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சமூகத்தின் முழுமையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அரசின் முயற்சிகள் முக்கியமானவை என்பதை சுட்டிக் காட்டிய ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அரசு இந்தப் பணியை தொலைநோக்குடனும் விரைவாகவும் மேற்கொண்டு வருகிறது என்றார்.</p> <p>"மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்", "அணுகக்கூடிய இந்தியா இயக்கம்" போன்ற அரசின் முன்முயற்சிகள் கல்வி, வேலைவாய்ப்பு, பிற துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம உரிமைகளை உறுதி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.</p> <p><strong>இதையும் படிக்க: <a title="Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?" href="https://tamil.abplive.com/news/india/no-proposal-for-brics-currency-s-jaishankar-after-trumps-tariff-warning-209064" target="_blank" rel="noopener">Jaishankar Brics: எச்சரித்த ட்ரம்ப், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னது என்ன? - பிரிக்ஸ் அமைப்பின் புதிய நாணயம்?</a></strong></p>
Read Entire Article