அரசுப்பள்ளிகளில் அன்றாட பராமரிப்பு பணி; ரோட்டரியுடன் கைகோத்த பள்ளிக் கல்வித்துறை! எப்படி?

7 months ago 12
ARTICLE AD
<p>ரோட்டரி, தமிழ்நாடு பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறையுடன்&zwnj; இணைந்து, அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; வாஷ் வசதிகளை உருவாக்குதல்&zwnj;, பராமரித்தல்&zwnj; மற்றும்&zwnj;&nbsp;பள்ளியின்&zwnj; அன்றாட பராமரிப்பு பணிகளை (housekeeping) ஏற்று நடத்துதல்&zwnj; ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்&zwnj; கையெழுத்திட்டுள்ளது.</p> <p>அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; உள்கட்டமைப்பை மேம்படுத்தவும்&zwnj; கற்றல்&zwnj; தரத்தை உயர்த்தும்&zwnj; நோக்கிலும் ஒரு பெருமுயற்சியை தமிழ்நாட்டில்&zwnj; உள்ள&nbsp;ரோட்டரி சங்கங்கள்&zwnj;, CARE4School திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj;, பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறையின்&zwnj;&nbsp;நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்&zwnj; திட்டத்துடன்&zwnj; ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்&zwnj;&nbsp;கையெழுத்திட்டுள்ளன. இத்திட்டத்தை துணை முதல்வர்&zwnj; உதயநிதி ஸ்டாலின்&zwnj; முன்னிலையில்&zwnj;, பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறை அமைச்சர்&zwnj;அன்பில்&zwnj; மகேஷ்&zwnj; பொய்யாமொழி, அதிகாரப்பூர்வமாகத்&zwnj; தொடங்கி வைத்தார்&zwnj;.</p> <p>தமிழ்நாடு ரோட்டரி அமைப்பின்&zwnj; சர்வதேசத்&zwnj; தலைவர்&zwnj; பிரான்செஸ்கோ அரேஸ்ஸோ மற்றும்&zwnj; ரோட்டரி சர்வதேச இயக்குநர்&zwnj; முருகானந்தம்&zwnj; சென்னை வர்த்தக மையத்தில்&zwnj; நடைபெற்ற, ரோட்டரி இந்தியவின்&zwnj; தலைமை மாநாட்டில்&zwnj; கலந்து கொண்டனர்&zwnj;.</p> <p><strong>திட்டத்தின் நோக்கம் என்ன?</strong></p> <p>&nbsp;இத்திட்டம்&zwnj; நீர்&zwnj;, சுகாதாரம்&zwnj; மற்றும்&zwnj; WASH வசதிகளை உருவாக்குவதையும்&zwnj;&nbsp;பராமரிப்பதையும்&zwnj; நோக்கமாகக்&zwnj; கொண்டுள்ளது. இத்திட்டத்தின்&zwnj; முக்கிய&nbsp;நோக்கம்&zwnj; தமிழ்நாடு முழுவதும்&zwnj; 1,000 அரசுப்&zwnj; பள்ளிகளை மேம்படுத்துவது,&nbsp;ஒவ்வொரு மாணவ மாணவியும்&zwnj;, குறிப்பாகப்&zwnj; பெண்கள்&zwnj; மற்றும்&zwnj;&nbsp;மாற்றுத்திறனாளி மாணவர்கள்&zwnj;, பாதுகாப்பான, சுத்தமான மற்றும்&zwnj; நன்கு&nbsp;பராமரிக்கப்படும்&zwnj; கழல்களிலிருந்து பபனடைவதை உறுதி செய்வதாகும்&zwnj;.</p> <p>நிகழ்வில்&zwnj; பேசிய துணை முதல்வர்&zwnj; உதயநிதி ஸ்டாலின்&zwnj;, &ldquo;ரோட்டரி ஒரு சேவை அமைப்பு மட்டும்&zwnj; அல்ல, மாறாக நம்பிக்கையின்&zwnj; உயிர்நாடி என்றும்&zwnj;, மாநிலத்தின்&zwnj; முன்னுரிமைப்&zwnj; பிரிவுகளாகக்&zwnj; கருதப்படும்&zwnj; கல்வி மற்றும்&zwnj; சுகாதாரத்&zwnj; துறைகளில்&zwnj; ரோட்டரி எப்போதும்&zwnj; முக்கிய பங்கு வகித்து வருகிறது.&rdquo; என்று அவர்&zwnj; குறிப்பிட்டார்&zwnj;.</p> <p>நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்&zwnj; வாயிலாகத்&zwnj; தமிழ்நாடு அரசுடன்&zwnj; இணைந்து செயல்படுவதில்&zwnj; ரோட்டரி ஒரு சிறப்பான முன்னெடுப்பை எடுத்துள்ளதாகவும்&zwnj;, இந்தக்&zwnj; கூட்டாண்மையின்&zwnj; வெற்றிக்குத்&zwnj;&nbsp;தனது வாழ்த்துக்களைத்&zwnj; தெரிவித்துக்&zwnj; கொண்டதாகவும்&zwnj; அவர்&zwnj; குறிப்பிட்டார்&zwnj;.</p> <p>இத்திட்டம்&zwnj;, புதிய வசதிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல்&zwnj;, நமது மாணவர்களுக்குச்&zwnj; சுத்தமான மற்றும்&zwnj; சுகாதாரமான சூழலை உறுதி&nbsp;செய்வதற்காகத்&zwnj; தொடர்ச்சியாகப்&zwnj; பராமரிப்பது பணிகளையும்&zwnj; மேற்கொள்வதே இத்திட்டத்தின்&zwnj; முக்கிய நோக்கம்&zwnj; என்று பள்ளிக்&zwnj; கல்வி அமைச்சர்&zwnj; வலியுறுத்தினார்&zwnj;. 1000 அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; 1000 WASH வசதிகளை அமைக்க முன்வந்துள்ள ரோட்டரி அமைப்பை அமைச்சர்&zwnj; பாராட்டினார்&zwnj;.</p> <p>பராமரிப்பு பணிகளின்&zwnj; விவரங்களைப்&zwnj; ஒரே தளத்தில்&zwnj; பார்வையிட பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் தளமான ரோட்டரி-நம்ம School டேஷ்போர்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.</p> <p>கூடுதலாக, இந்த டஷ்போர்டு ரோட்டரி தலைவர்கள்&zwnj;, மாவட்ட நிர்வாகம்&zwnj; மற்றும்&zwnj; CSR பங்களிப்பாளர்களை இணைப்பதற்கான ஒரு தளமாகச்&zwnj;&nbsp;செயல்படுகிறது. இந்த ஆண்டு 1,000 அரசுப்&zwnj; பள்ளிகளில்&zwnj; இச்செயல்பாடுகளை நம்ம ஸ்கூல்- நம்ம ஊரு பள்ளி திட்டத்தின்&zwnj; கீழ்&zwnj; ரோட்டரி செயல்படுத்த உள்ளது.</p> <p><strong>&nbsp;அது என்ன நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி?</strong></p> <p>&nbsp;நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி (நம்ம ஸ்கூல்&zwnj; பவுண்டேஷன்&zwnj;) என்பது தமிழ்நாடு அரசின்&zwnj; பள்ளிக்&zwnj; கல்வித்&zwnj; துறையின்&zwnj; கீழ்&zwnj; உள்ள ஒரு பிரிவு 8&nbsp;நிறுவனமாகும்&zwnj;. இத்திட்டம்&zwnj; சமூகப்&zwnj; பங்களிப்பு நிதியினை கல்வித்&zwnj; துறைக்கு வழங்குவதை ஊக்குவிப்பதையும்&zwnj;, அரசுப்&zwnj; பள்ளிகளின்&zwnj; வளர்ச்சிக்காகத்&zwnj;&nbsp;தொழில்&zwnj; மற்றும்&zwnj; தொண்டு நிறுவனங்கள்&zwnj;, சமூகங்கள்&zwnj;, தனிநபர்கள்&zwnj; மற்றும்&zwnj;&nbsp;முன்னாள்&zwnj; மாணவர்களின்&zwnj; பங்களிப்புகளையும்&zwnj; ஒன்றிணைப்பதையும்&zwnj;&nbsp;நோக்கமாகக்&zwnj; கொண்டுள்ளது. அனைத்து அரசுப்&zwnj; பள்ளிகளின்&zwnj; தேவைகளையும்&zwnj; மதிப்பிடுவதற்கும்&zwnj;, தேவையான ஒப்புதல்களைப்&zwnj; பெறுவதற்கும்&zwnj;, அரசு அதிகாரிகளின்&zwnj; மேற்பார்வையுடன்&zwnj; திட்டங்களைச்&zwnj; செயல்படுத்துவதற்கும்&zwnj; NSNOP ஒரு தனித்துவமான தளமாகச்&zwnj; செயல்படுகிறது.</p> <p>&nbsp;இந்த முயற்சி பற்றிய கூடுதல்&zwnj; விவரங்களுக்கு, <a href="https://nammaschool.tnschools.gov.in/">https://nammaschool.tnschools.gov.in/</a></p> <p><strong>&nbsp;+91 63853 13047</strong> என்ற தொலைபேசி எண்ணில்&zwnj; தொடர்பு கொள்ளலாம்&zwnj;.</p> <p><strong>&nbsp;[email protected]</strong> என்ற மின்னஞ்சல்&zwnj; முகவரியிலும்&zwnj; தொடர்பு கொள்ளலாம்&zwnj;.&nbsp;</p>
Read Entire Article