அங்கன்வாடியில் 618 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு: எங்கு தெரியுங்களா?

2 months ago 4
ARTICLE AD
<p style="text-align: left;">அங்கன்வாடியில் 618 காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்காங்க. &nbsp;12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வரும் 31ம் தேதி கடைசி நாள். உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.</p> <p style="text-align: left;">புதுச்சேரியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறையின் கீழ் அங்கன்வாடியில் காலியாக உள்ள 618 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் <strong>https://wcd.py.gov.in/</strong> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.</p> <p style="text-align: left;">புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் சாக்ஷாம் அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 என்ற திட்டத்தின் கீழ் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மதிப்பூதியத்தின் அடிப்படையில் மொத்தம் 618 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12-ம் அகுப்பு தேர்ச்சி போதுமானது. ஆர்வமுள்ள பெண்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.</p> <p style="text-align: left;">அங்கன்வாடியில் உள்ள பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மற்றும் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;"><strong>அங்கன்வாடி பணியாளர் 344</strong><br /><strong>அங்கன்வாடி உதவியாளர் 274</strong></p> <p style="text-align: left;">இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31-ம் தேதியின்படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபடியாக 35 வயது வரை இருக்கலாம். அங்கன்வாடி காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதார்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் வசிப்பவரா இருக்க வேண்டும். இதற்கான குடியிருப்பு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.</p> <p style="text-align: left;">அங்கன்வாடி பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.6000, அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு, நேர்காணல் ஆகியவை கிடையாது. இத்திட்டத்தின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள் அடங்கிய தேர்வு குழு மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை வெளியிடும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கன்வாடிக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு வாய்ப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.</p> <p style="text-align: left;">விரும்பமுள்ள பெண்கள் <strong>https://wcd.py.gov.in/</strong> என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு உள்ள கூகுள் படிவத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நேரடியாக விண்ணப்பம் பெறப்படாது. ஆர்வமுள்ள பெண்கள் நேரடியாக<strong> https://forms.gle/uu6rwytW8rpYGgkL7</strong> என்ற கூகுள் படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, குடியிருப்பு/ வசிப்பிட சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணம் கிடையாது. ஆன்லைன் விண்ணப்பம் கடந்த அக்டோபர் 1 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்</p> <p style="text-align: left;">புதுச்சேரியை சேர்ந்த பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி &nbsp;அங்கன்வாடியில் பணி வாய்ப்பைப் பெறலாம். மேலும் தகவல் மற்றும் உதவி பெற எண்கள், அங்கன்வாடி ஊழியர்களின் பணி தன்மை ஆகியவை அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.&nbsp;</p>
Read Entire Article