Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!

1 week ago 3
ARTICLE AD
<p>ஏப்ரல் 1 முதல் குப்பைகளைப் பிரித்துப் போடும் வகையில் 4 வண்ணத் தொட்டிகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. மக்களும் நிறுவனங்களும் இதைப் பின்பற்றி குப்பைகளைப் பிரித்து அளிக்காவிட்டால், அபராதமும் அளிக்கப்பட உள்ளது.&nbsp;</p> <p>மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட திடக் கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, 2 குப்பைத் தொட்டி முறை மாற்றப்பட்டு, 4 குப்பைத் தொட்டி மூறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் குப்பைகளைக் கையாளும் முறை மேம்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.</p> <h2><strong>இதுநாள் வரையிலான நடைமுறை என்ன?</strong></h2> <ul> <li>பச்சை வண்ண குப்பைத் தொட்டியில் ஈரமான குப்பைகள்</li> <li>நீல வண்ண குப்பைத் தொட்டியில் உலர் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வந்தது.</li> </ul> <h2><strong>இனி,</strong></h2> <ul> <li>பச்சை (ஈரக் குப்பைகள்): உணவு மிச்சங்கள், காய்கறித் தோல்கள் மற்றும் பிற மட்கும் கழிவுகள்.</li> <li>நீலம் (உலர் குப்பைகள்): நெகிழி, காகிதம், கண்ணாடி மற்றும் உலோகம்.</li> <li>சிவப்பு (சுகாதாரக் குப்பைகள்): டயப்பர்கள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் அதுபோன்ற கழிவுகள்.</li> <li>கருப்பு (ஆபத்தான/ சிறப்புக் கழிவுகள்): மின்விளக்குகள், மருந்துகள், வண்ணப்பூச்சு மற்றும் மின்னணுக் கழிவுகள்.</li> </ul> <p>இவ்வாறு 4 பிரிவுகளாகப் பிரித்து குப்பைகளைப் பெறுவதன் மூலம், குப்பைகள் உருவாகும் இடத்திலேயே அவை தரம் பிரிக்கப்பட்டுப் பெறப்பட உள்ளது. இதனால் குப்பைக் கிடங்குகளின் சுமை குறையும் எனக் கூறப்படுகிறது.</p> <p>இந்த குப்பைகளை மேலே சொன்ன வகையில் பிரித்துப் போடவில்லையெனில், குப்பைகளைப் பெற மறுத்துவிட வேண்டும் எனவும் சுகாதாரப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.</p> <p>குப்பைகள் அள்ளும் வண்டிகளிலும் 4 வண்ணக் குப்பைத் தொட்டிகளை வைக்கும் வகையில், வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.&nbsp;இதை மீறுவோர் மீது, மாசுபடுத்துவோருக்கு அபராதம் (polluter pays) கொள்கையின் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படலாம்.</p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/20/98d33b0d1296ccaa7c07a46fa729838e17346798932651165_original.jpg" width="720" /></p> <h2><strong>வணிக நிறுவனங்களுக்கு எப்படி?</strong></h2> <p>ஹோட்டல்கள், பெரிய குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்ற பெருமளவு கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.</p> <p>தினமும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்கள், ஈரக் கழிவுகளைத் தங்கள் வளாகத்திலேயே பதப்படுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.</p> <p>மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், கழிவு மேலாண்மை நடைமுறைகளைக் கண்காணிக்கவும், பிராந்தியங்கள் முழுவதும் விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் இணையவழி கண்காணிப்பு முறையையும் அறிமுகப்படுத்தி உள்ளது.</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/lifestyle/which-state-in-india-has-the-most-beautiful-women-255157" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article