<p>பள்ளி மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான உறுதிமொழி எடுப்பது குறித்த சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.</p>
<p>திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அறிக்கையில், 'பாதுகாப்பான முறையில், பிளாஸ்டிக் இல்லாமல் விநாயகர் சதுர்ச்சி கொண்டாடுவேன்' என்று உறுதிமொழி எடுக்க வலியுறுத்தப்பட்டு இருந்தது. இது சர்ச்சைகளைக் கிளப்பியது.</p>
<p>பள்ளிக் கல்வித்துறை சார்பில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ''சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அடிப்படையில் ஆட்சியர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை'' என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. </p>