Velankanni: ரூ.180 கோடி மதிப்பு..75 கிலோ ஹசிஸ் போதை பொருள் பறிமுதல் - சிக்கியது எப்படி?

1 year ago 15
ARTICLE AD
நாகப்பட்டினம் அடுத்த வேளாங்கண்ணியில் 75 கிலோ ஹசிஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. வேளாங்கண்ணி பூக்காரத் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். வேளாங்கண்ணியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ஹசிஸ் போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.180 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. போதை பொருள் கடத்தியதாக இருவரை கைது செய்த க்யூ பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article