Ukraine Russia War: உக்ரைன் போரில் உயிரிழந்த 10வது இந்தியர் - ரஷ்யாவிற்கு எதிராக மத்திய அரசு அதிரடி முடிவு

11 months ago 8
ARTICLE AD
<p><strong>Ukraine Russia War:</strong> உக்ரைன் ரஷ்யா போரில் கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த, மேலும் ஒரு இந்தியர் கொல்லப்பட்டுள்ளார்.</p> <h2><strong>ரஷ்ய ராணுவத்தில் இந்தியர் பலி:</strong></h2> <p>ரஷ்யா-உக்ரைன் மோதலில் கேரளாவைச் சேர்ந்த பினில் T.B என்பவர் இறந்ததைத் தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த சூழலில், உக்ரைன் - ரஷ்யா போரில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. &nbsp;</p> <h2>உடலை கொண்டுவர நடவடிக்கை:</h2> <p>வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செவ்வாயன்று, கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த பினில், உக்ரைன் - ரஷ்யா போரில்&nbsp; இறந்தார் என்றும், கேரளாவைச் சேர்ந்த மற்றொரு இந்தியர் காயமடைந்து மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் உறுதிப்படுத்தினார். இதுதொடர்பான அறிக்கையில்,&nbsp; &nbsp; "பினிலின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாஸ்கோவில் உள்ள எங்கள் தூதரகம் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளது. மேலும் சாத்தியமான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பினிலின் சடலத்தை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. காயமடைந்த நபரை விரைவில் வெளியேற்றவும், இந்தியாவுக்கு திருப்பி அனுப்பவும் நாங்கள் முயன்றுள்ளோம்" என்று ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். &nbsp;</p> <p><a title="Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?" href="https://tamil.abplive.com/spiritual/mattu-pongal-2025-date-know-time-significance-rituals-and-other-details-of-the-third-day-of-tamil-festival-with-jallikattu-212792" target="_blank" rel="noopener">இதையும் படியுங்கள்: Pongal 2025: மாட்டு பொங்கல், சரியான நேரம் என்ன? முக்கியத்தும் பற்றி தெரியுமா? எப்படி கொண்டாடலாம்?</a></p> <h2><strong>நடந்தது என்ன?</strong></h2> <p>திருச்சூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் பினில் டிபி(32), அவரது உறவினர் ஜெயின் டிகே (27) ஆகிய இருவரும்,&nbsp; ஐடிஐ மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்த நிலையில்,&nbsp; வேலை வாய்ப்புக்காக ஏப்., 4ல் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த நாட்டை அடைந்தவுடன் இந்திய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விரும்பிய பணிகளை தொடர அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக, எதிர்பாராத விதமாக ரஷ்ய ராணுவ ஆதரவு சேவையின் ஒரு பகுதியாக போர் மண்டலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.&nbsp;</p> <p>பினில் மற்றும் ஜெயின் உக்ரைனின் போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கித் தவித்தனர். அவர்களின் மொபைல் போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது, இந்த சூழலில் பினில் உயிரிழந்த நிலையில், ஜெயின் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p> <h2><strong>வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை:</strong></h2> <p>பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடியபோது, ​​ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை முன்கூட்டியே வெளியேற்றுவது குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து, ரஷ்ய ராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா செவ்வாய்க்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.&nbsp;</p>
Read Entire Article