UGC NET: பண்டிகை அல்ல; கலாச்சாரம்: பொங்கலன்று யுஜிசி நெட் தேர்வா? பொங்கி எழுந்த தமிழக அரசு!

1 year ago 7
ARTICLE AD
<p>மத்தியக் கல்வி அமைச்சகத்தின்&zwnj; கீழ்&zwnj; உள்ள தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதன்&zwnj; யுஜிசி நெட் தேர்வை பொங்கல்&zwnj; திருநாள்&zwnj; நாட்களில்&zwnj; நடத்தப்படுவதை மாற்றியமைல்ல வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சருக்கு, உயர் கல்வித்துறை அமைச்சர்&zwnj; கோவி. செழியன்&zwnj; கடிதம் எழுதி உள்ளார்.</p> <p>அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:</p> <p>&rsquo;&rsquo;ஒன்றிய கல்வி அமைச்சகத்தின்&zwnj; கீழ்&zwnj; உள்ள தேசிய தேர்வுத் முகமை அதன்&zwnj; யுஜிசி நெட் தேர்வை 3 ஜனவரி 2025 முதல்&zwnj; 16 ஜனவரி 2025 வரை நடத்த அறிவித்துள்ளது.</p> <p>உலகம்&zwnj; முழுவதும்&zwnj; உள்ள அனைத்துத்&zwnj; தமிழ்&zwnj; சமுதாய மக்களாலும்&zwnj; கொண்டாடப்படும்&zwnj; விழா பொங்கல்&zwnj; திருநாள்&zwnj; என்பதை உங்கள்&zwnj; கவனத்திற்குக்&zwnj; கொண்டு வர விரும்புகிறேன்&zwnj;. இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்&zwnj; ஜனவரி 13 முதல்&zwnj; ஜனவரி 16 வரை நான்கு நாட்கள்&zwnj; கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2025, 13 ஆம்&zwnj; தேதி போகி பண்டிகையும்&zwnj;, 14 ஆம்&zwnj; தேதி பொங்கல்&zwnj; (தமிழ்ப்&zwnj; புத்தாண்டு) பண்டிகையும்&zwnj;, ஜனவரி 15 ஆம்&zwnj; தேதி திருவள்ளுவர்&zwnj; தினமாகவும்&zwnj; (மாட்டுப்&zwnj; பொங்கல்&zwnj;) ஜனவரி 16 ஆம்&zwnj; தேதி உழவர்&zwnj; திருநாள்&zwnj; / காணும்&zwnj; பொங்கலாகவும்&zwnj; கொண்டாடப்படுகிறது.</p> <p>இந்த நான்கு நாட்களும்&zwnj; உலகெங்கிலும்&zwnj; உள்ள தமிழர்கள்&zwnj; பொங்கல்&zwnj; திருநாளை உற்சாகத்துடன்&zwnj; கொண்டாடி மகிழ்வார்கள்&zwnj;. இந்த விழாவை முன்னிட்டு தமிழக அரசு ஏற்கனவே 2025 ஜனவரி 14 முதல்&zwnj; 16 வரை விடுமுறை அறிவித்துள்ளது.</p> <p><strong>பண்டிகை மட்டுமல்ல; கலாச்சாரம்!</strong></p> <p>தமிழ்நாட்டு விவசாயிகளின்&zwnj; உணர்வார்ந்த திருநாளாகக்&zwnj; கொண்டாடப்படும்&zwnj; பொங்கல்&zwnj; ஒரு பண்டிகை மட்டுமல்ல, 3,000 ஆண்டுகளுக்கும்&zwnj; மேலான தமிழர்களின்&zwnj; கலாச்சாரம்&zwnj; மற்றும்&zwnj; பாரம்பரியத்தின்&zwnj; அடையாளமாகும்&zwnj;.</p> <p>பொங்கல்&zwnj; திருநாளைப்&zwnj; போலவே ஆந்திரா மற்றும்&zwnj; தெலங்கானாவிலும்&zwnj; மகர சங்கராந்தி விழா ஜனவரி மாதத்தில்&zwnj; கொண்டாடப்படுகிறது என்பதையும்&zwnj; சுட்டிக்காட்ட விரும்புகிறேன்&zwnj;.&nbsp;பொங்கல்&zwnj; விடுமுறை நாட்களில்&zwnj; நெட்&zwnj; தேர்வு நடத்தப்பட்டால்&zwnj;, மாணாக்கர்கள்&zwnj; இத்தேர்வுக்கு தயாராவதற்கும்&zwnj; எழுதுவதற்கும்&zwnj; தடை ஏற்படும்&zwnj;.</p> <h2><strong>சிஏ தேர்வுகள் மாற்றி அமைப்பு</strong></h2> <p>மக்களவை உறுப்பினர்&zwnj;.சு.வெங்கடேசன்&zwnj; விடுத்த&nbsp;வேண்டுகோளின்படி, பொங்கல்&zwnj; திருநாளை முன்னிட்டு, ஜனவரி 2025க்கான பட்டயக்&zwnj; கணக்காளர்கள்&zwnj; அறக்கட்டளைத்&zwnj; தேர்வு மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p> <p>எனவே, தமிழ்நாடு மற்றும்&zwnj; பிற மாநிலங்களில்&zwnj; உள்ள மாணவர்கள்&zwnj; மற்றும்&zwnj; கல்வியாளர்கள்&zwnj; பாதிக்கப்படுவதை தவிர்த்திடும்&zwnj; வகையில்&zwnj; பொங்கல்&zwnj; திருநாள்&zwnj; விடுமுறை நாட்களில்&zwnj; நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசி - நெட்&zwnj; தேர்வு மற்றும்&zwnj; பிற தேர்வுகளை வேறு தேதிகளில்&zwnj; நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&zwnj;.</p> <p>இவ்வாறு, மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில்&zwnj; உயர் கல்வித்துறை அமைச்சர்&zwnj; கோவி. செழியன்&zwnj; தெரிவித்துள்ளார்&zwnj;.</p>
Read Entire Article