<p>பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், வேட்புமனுத் தாக்கல் செய்த கையோடு பிரச்சாரத்தைத் தொடங்கினார். </p>
<p>அப்போது அவர் பேசியதாவது:</p>
<p>’’என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் தொகுதி மக்களே..</p>
<p>லட்சுமி நரசிம்மர் கோயிலில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன். எங்கிருந்து வேண்டுமானாலும் பிரச்சாரத்தைத் தொடங்கலாம். ஆனால் நம் வீட்டின் வாசலில் இருந்து தொடங்கலாம் என்று ஆசைப்பட்டேன். வட சென்னையின் அடையாளம் பெரம்பூர்.</p>
<h2><strong>தமிழ்நாட்டை காப்பாற்றியே ஆக வேண்டும்</strong></h2>
<p>பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரியில்லாத, போதைப் பொருள் அதிகம் உள்ள தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். இந்த நிலைக்குக் கொண்டு வந்தது தீயசக்தி திமுகதான் என்று எல்லோருக்கும் தெரியும். </p>
<p>இந்த 5 ஆண்டில் திமுக அரசினர் எப்படி நம்மை ஸ்மார்ட் ஆக கொள்ளை அடித்தார்களோ, அதேபோல ஸ்மார்ட் ஆக ஓட்டு போடுங்கள். எப்படியாவது வெல்லலாம் என்று நினைக்கும் திமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள். கொடுக்கும் எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு அவர்களின் காதிலேயே விசிலை ஊதி அனுப்புங்கள்’’.</p>
<p>இவ்வாறு தவெக தலைவர் <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a> பேசினார்.</p>
<p><strong>தவெக தலைவர் விஜயின் பேச்சை நேரலையில் உடனுக்குடன் முழுமையாகக் காண</strong></p>
<p> </p>
<p><iframe title="YouTube video player" src="https://www.youtube.com/embed/Tr1ODRilXwo?si=DuziOu2clw8IKy7_" width="560" height="315" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>