TRUST Exam: 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

1 year ago 7
ARTICLE AD
<p>ஆண்டுதோறும் 1000 ரூபாய் என்ற அளவில் 3 ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்க நடத்தப்படும் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு (ட்ரஸ்ட்) விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு நவம்பர் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.</p> <h2><strong>ஊரகத்&zwnj; திறனாய்வுத்&zwnj; தேர்வு (TRUST Exam), டிசம்பர்&zwnj; 2024</strong></h2> <p>தமிழ்நாடு ஊரகப்&zwnj; பகுதி மாணவர்களுக்கான திறனாய்வுத்&zwnj; தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான அறிவுரைகளை அரசுத்&zwnj; தேர்வுகள்&zwnj; இயக்ககம்&zwnj; வழங்கி உள்ளது.&nbsp;</p> <p>அதன்படி, 2024- 2025ஆம்&zwnj; கல்வியாண்டில்&zwnj; அரசு அங்கீகாரம்&zwnj; பெற்ற பள்ளிகளில்&zwnj; பயிலும்&zwnj; ஒன்பதாம்&zwnj; வகுப்பு மாணவ / மாணவியர்கள்&zwnj; 2024 டிசம்பர்&zwnj; மாதம்&zwnj; 14-ஆம்&zwnj; தேதி ( சனிக்கிழமை ) நடைபெறவுள்ள ஊரகத்&zwnj; திறனாய்வுத்&zwnj; தேர்விற்கு (TRUST) விண்ணப்பிக்கலாம்&zwnj; என அறிவிக்கப்படுகிறது.</p> <p>&nbsp;9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் ₹1,000 உதவித்தொகை பெற, நவ.20ம் தேதிக்குள்ளாக தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவ மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும்.&nbsp;</p> <h2><strong>யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?</strong></h2> <p>ஊரகப்&zwnj; பகுதிகளில்&zwnj; (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மறறும்&zwnj; டவுன்சிப்&zwnj;), அரசு அங்கீகாரம்&zwnj; பெற்ற பள்ளிகளில்&zwnj; 2024 -2025 கல்வியாண்டில்&zwnj; 9 - ஆம்&zwnj; வகுப்பு பயிலும்&zwnj; மாணவ மாணவியர்&zwnj; இந்தத் திறனாய்வுத்&zwnj; தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்&zwnj;.</p> <h2><strong>வருமானச் சான்று முக்கியம்</strong></h2> <p>தேர்விற்கு விண்ணப்பிக்கும்&zwnj; தேர்வரின்&zwnj; பெற்றோர்&zwnj; / பாதுகாவலரின்&zwnj; ஆண்டு வருமானம்&zwnj; ரூ.1,00,000/-- மிகாமல்&zwnj; உள்ளது என்பதற்கு வருவாய்&zwnj; துறையினரிடம் இருந்து வருமான சான்று பெற்று அளித்தல்&zwnj; வேண்டும்&zwnj;.</p> <h2><strong>&nbsp;விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2> <p>&nbsp;தேர்விற்கு விண்ணப்பிக்கும்&zwnj; மாணவ, மாணவியர்&zwnj; www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில்&zwnj; விண்ணப்பத்தினை பதிவிறக்கம்&zwnj; செய்து, தேர்வுக்கான கட்டணம்&zwnj; ரூ.5/- சேவைக்&zwnj; கட்டணம்&zwnj; ரூ.5/- என மொத்தமாக ரூ.10/-னை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்&zwnj; பணமாக பள்ளி தலைமையாசிரியரிடம்&zwnj; ஒப்படைக்க வேண்டும்&zwnj;.</p> <p><a href="https://tnegadge.s3.amazonaws.com/notification/TRUST/1731330681.pdf">https://tnegadge.s3.amazonaws.com/notification/TRUST/1731330681.pdf </a> என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பத்தினை பதிவிறக்கம்&zwnj; செய்துகொள்ளலாம்.&nbsp;</p> <h2><strong>நவம்பர் 20 கடைசி</strong></h2> <p>தேர்விற்கு விண்ணப்பிக்க 12.11.2024 முதல்&zwnj; 20.11.2024 வரை என கால நிர்ணயம்&zwnj; செய்யப்பட்டுள்ளது. இதற்குப்&zwnj; பின்னர் பெறப்படும்&zwnj; விண்ணப்பங்கள்&zwnj; நிராகரிக்கப்படும்&zwnj;.</p> <p>ஒவ்வொரு வருவாய்&zwnj; மாவட்டத்திலும்&zwnj; தோந்தெடுக்கப்படும்&zwnj; 100 மாணவர்களுக்கு (50 மாணவியர்&zwnj; + 50 மாணவர்கள்) 9 ஆம்&zwnj; வகுப்பு முதல்&zwnj; 12 ஆம்&zwnj; வகுப்பு வரை தொடர்ந்து படிக்கும்&zwnj; காலத்திற்கு படிப்புதவித்&zwnj; தொகை ஆண்டுதோறும்&zwnj; ரூ.1000/ வீதம்&zwnj; வழங்கப்படும்&zwnj;.</p> <h2><strong>&nbsp;யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?</strong></h2> <p>&nbsp;அதே நேரத்தில் நகராட்சி மற்றும்&zwnj; மாநகராட்சி பகுதிகளில்&zwnj; படிக்கும்&zwnj; மாணவ / மாணவிகள்&zwnj; விண்ணப்பிக்க இயலாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.</p>
Read Entire Article