Train Cancel: செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே ரயில்கள் ரத்து.. எந்தெந்த ரயில்கள் ? எப்போது?

6 months ago 5
ARTICLE AD
<p style="text-align: left;">செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை வரை இயங்கக்கூடிய ரயில் சேவை, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும், இந்த வழித்தடத்தில் பணி நிமிர்த்தமாக சென்னை புறநகர் பகுதிக்கும், அதேபோன்று சென்னை புறநகர் பகுதியில், இருந்து சென்னை நகர் பகுதிக்கும் சென்று வருகின்றனர். எனவே, சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடம் இருந்து வருகிறது.</p> <h3 style="text-align: left;">ரயில்கள் ரத்து - Train Cancel&nbsp;</h3> <p style="text-align: left;">அவ்வப்போது இந்த வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த சமயங்களில் கூடுதலாக சிறப்பு ரயில்களும், இயக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம் இடையே காட்டாங்குளத்தூர் பகுதியில், பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.&nbsp;</p> <h3 style="text-align: left;">ரயில் சேவை ரத்து செய்யப்படும் நேரம்:</h3> <p style="text-align: left;">சென்னை எழும்பூர் - விழுப்புரம் பகுதிக்கு உட்பட்ட காட்டாங்குளத்தூர் பகுதியில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி 11:45 மணி முதல் 15:15 மணி வரை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.&nbsp;</p> <h3 style="text-align: left;">ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம் - Chennai Beach to Chengalpattu Train Cancel&nbsp;</h3> <p style="text-align: left;">இது தொடர்பாக தெற்கு ரயில்வேயில் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கடற்க- செங்கல்பட்டு இடையே பத்து மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.&nbsp;</p> <h3 style="text-align: left;">கூடுவாஞ்சேரி மற்றும் செங்கல்பட்டு இடையே ரத்தாகும் ரயில்கள்&nbsp;</h3> <p style="text-align: left;">காலை 11 மணிக்கு சென்னை - செங்கல்பட்டு வரை வருகின்ற ரயில் கூடுவாஞ்சேரியுடன் ரத்து செய்யப்படுகிறது.&nbsp;</p> <p style="text-align: left;">காலை 11: 45 மணிக்கு சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டுக்கு வரும் ரயில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும்.&nbsp;</p> <p style="text-align: left;">நண்பகல் 12:30 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரும் முறையில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது &zwnj;</p> <p style="text-align: left;">மதியம் 1: 45 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரும் முறையில் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது &zwnj;.</p> <p style="text-align: left;">நண்பகல் 12 :45 மணியளவில் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை வரும் மின்சார ரயில்கள் தாம்பரத்துடன் ரத்து செய்யப்படுகிறது.&nbsp;</p> <h3 style="text-align: left;">செங்கல்பட்டு - சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள்&nbsp;</h3> <p style="text-align: left;">நண்பகல் 12 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">மதியம் 1 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">மதியம் 1.50 மமணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">மதியம் 3:05 மணி அளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p style="text-align: left;">மதியம் 2:25 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
Read Entire Article