Top 10 News: சிறுமிகளுடன் திசைமாறிய ராட்சத பலூன், கால்சனை மிஞ்சிய குகேஷ் - டாப் 10 செய்திகள்

11 months ago 7
ARTICLE AD
<p><strong>விருதுகள் வழங்கிய <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a></strong></p> <p>திருவள்ளுவர் தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார். பாரதியார் விருது பாடலாசிரியர் கபிலனுக்கும், பாரதிதாசன் விருது பொன். செல்வகணபதிக்கும், திரு.வி.க., விருது முத்து ரவீந்திரநாத்துக்கும், கலைஞர் விருது முத்து வாவாசிக்கும் வழங்கப்பட்டது.</p> <p><strong>பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலம்</strong></p> <p>மாட்டுப் பொங்கலை ஒட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளை, தங்களது வீரத்தை வெளிப்படுத்தி காளையர்கள் அடக்கி வருகின்றனர். வெற்றி பெறும் மாடுகளின் வீரர்கள் மற்றும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.</p> <p><strong>திசை மாறி சென்ற பலூன்</strong></p> <p>பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்ற சர்வதேச பலூன் திருவிழாவில் பலூன் திசை மாறி கேரளாவில் தரையிறங்கியதால் பரபரப்பு. இதில் பயணித்த 2 சிறுமிகள் பத்திரமாக மீட்பு! கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டில் என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் பலூன் தரையிறங்கியுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.</p> <p><strong>யுஜிசி தேர்வுக்கான மறுதேதி அறிவிப்பு</strong></p> <p>&nbsp;தமிழகத்தில் பொங்கல் பண்டிகை நாளில் யுஜிசி தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியது.<br />இதைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 15) நடைபெற இருந்த &nbsp;17 பாடங்களுக்கான தேர்வுகள் வருகிற 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.</p> <p><strong>மோடிக்காக காத்திருக்கும் மணிப்பூர்</strong></p> <div>பிரதமர் மோடியின் பயணத்துக்காக மணிப்பூர் இன்னும் காத்துக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதற்கு அவருக்கு நேரமும், ஆர்வமும், சக்தியும் இருக்கிறது. ஆனால் மணிப்பூரில் துயரத்தில் வாடும் மக்களை சந்திப்பது அவசியமானது என அவர் நினைக்கவில்லை - காங்கிரஸ்</div> <div>&nbsp;</div> <div><strong>மெட்டா நிறுவனத்திற்கு சம்மன்</strong></div> <div> <p>மெட்டா சிஇஒ மார்க் ஜுக்கர்பெர்க், &ldquo;இந்தியா உட்பட உலகம் முழுவதும் 2024ல் தேர்தல்கள் நடைபெற்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்ட சூழல்களை சமாளிக்க முடியாமல், மக்களிடம் எதிர்ப்புகளை பெற்ற ஆளும் கட்சிகள், அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன&rdquo; என தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மார்க் ஜூக்கர்பெர்க்-க்கு சம்மன் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.</p> </div> <div><strong>தென்கொரிய முன்னாள் அதிபர் கைது</strong></div> <div>&nbsp;</div> <div>ராணுவச் சட்டத்தை அமல்படுத்தி திரும்பப் பெற்ற விவகாரத்தில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிபருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.</div> <div>&nbsp;</div> <div><strong>ரஷ்யாவிற்கு இந்தியா கோரிக்கை</strong></div> <div>&nbsp;</div> <div>ரஷ்ய ராணுவத்தில் பணியில் இருந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர் யுத்த களத்தில் தாக்குதலில் உயிரிழந்த நிலையில், அங்கு ராணுவப் பணியில் ஈடுபட்டுள்ள இந்தியர்கள் அனைவரையும் விரைந்து விடுவிக்க வேண்டும் என இந்தியா மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.</div> <p><strong>கால்சனை மிஞ்சிய குகேஷ்</strong></p> <p>கடந்த 2024ம் ஆண்டில் நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் வென்றதன் மூலம் ரூ.13.6 கோடி ரூபாய் வருவாயை குகேஷ் ஈட்டியுள்ளார். செஸ் மூலம் அதிக வருவாய் ஈட்டியோர் பட்டியலில் அவரே முதலிடம் வகிக்கிறார். உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரூ. 5.45 கோடி வருவாயுடன் 4ம் இடத்தில் இருக்கிறார்.</p> <p><strong>ரஞ்சி கோப்பையில் களமிறங்கும் பண்ட்!</strong></p> <p>இந்திய வீரர் ரிஷப் பண்ட் 7 வருடங்களுக்குப் பிறகு ரஞ்சிப் போட்டியில் களமிறங்க முடிவு செய்துள்ளார். அதன்படி, வரும் 23ம் தேதி நடைபெற உள்ள சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி அணிக்காக பண்ட் விளையாட உள்ளார்.</p>
Read Entire Article