Top 10 News: சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர்.. பிரசாந்த் கிஷோர் கைது - டாப் 10 செய்திகள்

11 months ago 7
ARTICLE AD
<p style="text-align: justify;"><strong>உரையை வாசிக்காமலே புறப்பட்டுச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி</strong></p> <p style="text-align: justify;">2025ம் ஆண்டு நடக்கும் முதல் சட்டசபைக் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் &nbsp;மாளிகைக்கு புறப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதத்தை அவமதிப்பு காரணமாகவே சட்டப்பேரைவில் இருந்து வெளியேறியதாக ஆளுநர் மாளிகை சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p> <p style="text-align: justify;"><strong>துறைரீதியான பணிக்காக டெல்லி சென்றேன்"</strong></p> <p style="text-align: justify;">"அமலாக்கத்துறை சோதனைக்கும், நான் டெல்லி சென்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றும் சோதனைகள் வழக்கமான ஒன்றுதான்; புதிது அல்ல -டெல்லியில் இருந்து திரும்பிய அமைச்சர் துரைமுருகன், சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்</p> <p style="text-align: justify;"><strong>பிரசாந்த் கிஷோர் கைது</strong></p> <p style="text-align: justify;">பீகார் மாநிலம் பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய ஜன் சுராஜ் கட்சித் தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுப் பணியாளர் தேர்வில் முறை கடு நடந்ததாக கூறி பிரசாந்த் கிஷோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய நிலையில் கைது</p> <p style="text-align: justify;"><strong>திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் ஜாமீனில் விடுதலை</strong></p> <p style="text-align: justify;">திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுவித்து பழனி குற்றவியல் நடுவர் நீடுமன்றம் உத்தரவு. தனியார் மதுபான கூடத்துக்குள் நுழைந்து பணியாளரை மிரட்டிய வழக்கில் இருவரும் கைதாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p> <p style="text-align: justify;"><strong>காவல்துறை விளக்கம்</strong></p> <p style="text-align: justify;">கருப்பு துப்பட்டா விவகாரம் காவல் துறை விளக்கம் கருப்பு நிற துப்பட்டா விவகாரம் தொடர்பாக சென்னை காவல் துறை விளக்கம் பாதுகாப்பில் இருந்த காவல் ஆளிநர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் சம்பவம் நிகழ்ந்தது இனி இதுபோல் நிகழாமல் இருக்க பாதுகாப்பு சென்னை காவல் பிரிவுக்கு அறிவுறைகள் - காவல் துறை விளக்கம்.</p> <p style="text-align: justify;"><strong>ஜல்லிக்கட்டு முன்பதிவு:</strong></p> <p>அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இன்று மாலை முதல் முன்பதிவு தொடங்குகிறது. madurai.nic.in இணையதளத்தில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஜன.7 மாலைக்குள் பதிவு செய்ய வேண்டும். இதில் ஒரு காளை, ஏதேனும் ஒரு இடத்தில் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்</p> <p><strong>விபத்தில் 3 பேர் உயிரிழப்பு</strong></p> <p>திருப்பதிக்கு பாதயாத்திரை சென்றபோது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் உயிரிழப்பு: 3 பேர் காயமடைந்தனர். சித்தூர் மாவட்டம், ராமசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர்கள், ரங்கம்பேட்டை வழியாக பாத யாத்திரை சென்றபோது விபத்தில் சிக்கினர்.&nbsp;</p> <p><strong>சிங்கார சென்னை &rdquo;ஸ்மார்ட் கார்ட்&rdquo;</strong></p> <p>சிங்கார சென்னை' கார்டையயன்படுத்தி மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் வசதியை தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர். தாம்பரம், கிண்டி, திருவான்மியூர், பிராட்வே, கோயம்பேடு உள்ளிட்ட 20 பணிமனைகளில் கார்டுகளை மக்கள் வாங்கலாம்.&nbsp;</p> <p><strong>ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது</strong></p> <p>அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.ஞானசேகரன் மீது வழிப்பறி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது, தற்போது 4ஆவது முறையாக குண்டாஸ் பாய்ந்துள்ளது.&nbsp;</p> <p><strong>மகாராஜா வசூல் சாதனை</strong></p> <p>கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது <a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>- சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம்.. இதுவரை 91 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளதாக தகவல்</p>
Read Entire Article