<ul>
<li>மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். </li>
<li>கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நெடுந்தீவு முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.</li>
<li>தமிழ்நாட்டில் இன்று இரண்டாவது நாளாக வாக்காளர் பெயர் சேர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர். படிவம் சமர்பித்தும் பெயர் விடுபட்டோர் பெயர் சேர்க்க படிவம் கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</li>
<li>தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 ரயில்கள் ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை ஒரு நிமிடம் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</li>
<li>கோவையில் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசம்பர் 30ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். </li>
<li>மகாத்மா காந்தி பெயரிலான வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு ரத்துச் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனவரி 5ம் தேதி நாடு தழுவிய அளவில் பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</li>
<li>பீகாரில் சிமெண்ட் மூட்டை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் ஆற்றுப் பாலத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். </li>
<li>தவெக தலைவர் விஜயின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார்.</li>
<li>அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புடின் காட்டமாக விமர்சித்துள்ளார்</li>
<li>19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் மாத்ரே இந்திய அணி கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. </li>
<li>இந்தியா இலங்கை அணிகள் இடையேயான மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் 4வது போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது</li>
</ul>