<p>டிஎன்பிஎஸ்சி குரூப் VA பணிகளில் அடங்கிய பதவிகளுக்குத் தேர்வான நபர்கள், மே 28ஆம் தேதிக்குள் சான்றிதழ்கள், ஆவணங்களை சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.</p>
<p>தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம், நிதித் துறைகளில் காலியாக உள்ள உதவிப்பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப் 5 A தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p>
<p>இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:</p>
<p>''தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 16/2025, நாள் 07.10.2025-இல் அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் VA பணிகளில் அடங்கிய தலைமைச் செயலகத் துறைகளில் (சட்டம் மற்றும் நிதித் துறைகள் நீங்கலாக / நிதித் துறைகள்) உள்ள உதவியாளர் / உதவிப் பிரிவு அலுவலர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் / ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.</p>
<h2><strong>சில சான்றிதழ்களில் குறைபாடுகள்</strong></h2>
<p>சரிபார்ப்புக்குப் பின்னர், சில சான்றிதழ்கள் / ஆவணங்கள் முழுமையாக/ சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் / குறைபாட்டுடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, இத்தகைய தேர்வர்கள் 19.05.2026 முதல் 28.05.2026 வரை (இரவு 11.59 மணிக்குள்) விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்களை /ஆவணங்களை மீள் பதிவேற்றம் செய்ய / குறைகளை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்படுகிறது.</p>
<h2><strong>குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலம் தகவல்</strong></h2>
<p>மேற்படி தேர்வர்களின் பதிவெண்களைக் கொண்ட பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான குறிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்தகவல், அத்தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல், ஆகியவற்றின் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்தேர்வர்கள் அனைவரும் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை / ஆவணங்களை தேர்வாணைய இணையதளத்தில் அவர்களுடைய ஒருமுறை பதிவுக்கணக்கின் (OTR Account) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="zxx"><a href="https://t.co/l6Bzwe8eaE">pic.twitter.com/l6Bzwe8eaE</a></p>
— TNPSC (@TNPSC_Office) <a href="https://twitter.com/TNPSC_Office/status/2056622510138159467?ref_src=twsrc%5Etfw">May 19, 2026</a></blockquote>
<p>
<script src="https://platform.twitter.com/widgets.js" async="" charset="utf-8"></script>
</p>
<h2><strong> விண்ணப்பம் நிராகரிக்கப்படும் </strong></h2>
<p>அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில், அத்தகைய தேர்வர்களின் உரிமை கோரல் (claim) / விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது என்று <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் தெரிவித்துள்ளார்.</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/auto/don-t-make-these-mistakes-when-parking-your-car-in-the-summer-260798" width="631" height="381" scrolling="no"></iframe></p>