TNPSC குரூப் - 1, 1ஏ தேர்வு ; ஆயிரக்கணக்கானோர் ஆப்சென்ட்... அதிர்ச்சி தரும் சேலம் , விழுப்புரம்

6 months ago 6
ARTICLE AD
<p style="text-align: left;"><strong>சேலம்:</strong> <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது, இதில் 3,326 பேர் வரவில்லை, இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை.</p> <h2 style="text-align: left;">டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் - 1, 1ஏ தேர்வு</h2> <p style="text-align: left;">தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் துணை ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்களும், குரூப்-1ஏ பணியிடங்களில் உதவி வனப் பாதுகாவலர் பதவியில் 2 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் தேர்வு நடத்தப்படுகிறது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் தேர்வு எழுதினர். இதற்காக மாநிலம் முழுவதும் 44 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 987 தலைமைக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, சென்னையில் 170 இடங்களில் 41,094 பேர் தேர்வு எழுதினர்.&nbsp;</p> <p style="text-align: left;"><a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> சார்பில் குரூப் - 1, 1ஏ பணியின் முதல்நிலை தேர்வுக்கான எழுத்துத்தேர்வு, நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் சேலம், சேலம் மேற்கு, தெற்கு, ஆத்துார் வட்டத்துக்கு உட்பட்ட, 41 மையங்களில், 55 கூடங்களில் தேர்வு நடத்தப்பட்டது. காலை, 8:30 முதல், 9:00 மணி வரை, தேர்வர்கள் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். 14,291 பேரில், 10,965 பேர் தேர்வு எழுதினர். இது, 76.72 சதவீதம். 3,326 பேர் வரவில்லை. இது, 23.27 சதவீதம். தேர்வு மையங்களை, 14 நடமாடும் குழுவினரும் கண்காணித்தனர்.</p> <h2 style="text-align: left;">&nbsp;டி.என்.பி.எஸ்.சி., தேர்வில்&nbsp; 2867 பேர்&nbsp; பங்கேற்பு</h2> <p style="text-align: left;">சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த தேர்வை, கலெக்டர் பிருந்தாதேவி பார்வையிட்டார். தேர்வாணைய விதிமுறைப்படி வினாத்தாள், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள் சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம், தேர்வர்களின் நுழைவுச்சீட்டு சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதாக, கலெக்டர் தெரிவித்தார்.</p> <h2 style="text-align: left;">விழுப்புரம் : 2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகை புரியவில்லை</h2> <p style="text-align: left;">இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மற்றும் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரி மையங்களில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்றது.</p> <p style="text-align: left;">விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 13 தேர்வு மையங்களில் 28 அறைகளிலும், திண்டிவனம் வட்டத்தினை தலைமையிடமாகக் கொண்டு 4 தேர்வு மையங்களில் 6 அறைகள் என மொத்தம் 17 தேர்வு மையங்களில் 34 அறைகளில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 மற்றும் 1A நடைபெற்று வருகிறது. இத்தேர்விற்கு 8493 தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 6395 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரிந்துள்ளனர்.</p> <p style="text-align: left;">2098 தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. அதாவது, 75.30 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுதி வருகின்றனர். 24.70 சதவீதம் தேர்வர்கள் தேர்வெழுத வருகைபுரியவில்லை. மேலும், இத்தேர்வு பணியினை கண்காணித்திட பறக்கும் படை அலுவலர்கள், நடமாடும் குழு அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் ஈடுபடுபட்டனர்.</p>
Read Entire Article