<p>3935 பணியிடங்களைக் கொண்ட குரூப் 4 தேர்வுக்கு இன்று (ஏப். 25) முதல் விண்ணப்பிக்கலாம் என்று <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> அழைப்பு விடுத்துள்ளது. மாநிலத்தின் அதிகம் பேர் போட்டி போடும் குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம், வயது வரம்பு, தேர்வு முறை எப்படி? காணலாம்.</p>
<p>10ஆம் வகுப்பே கல்வித் தகுதி, ஒரே ஒரு தேர்வு என்பதால், ஏராளமான தேர்வர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது வழக்கம். குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் மே 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு ஜூலை 12ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.</p>
<h2><strong>என்னென்ன பதவிகள்?</strong></h2>
<p>கிராம நிர்வாக அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌, சுருக்கெழுத்து தட்டச்சர்‌, நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர், வனக்காப்பாளர்‌ மற்றும்‌ வனக்காவலர்‌ உள்ளிட்ட பதவிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்படுகிறது. </p>
<h2><strong>வயது வரம்பு</strong></h2>
<p>கிராம நிர்வாக அலுவலர்களுக்கு 21 வயது நிறைவடைந்து இருக்க வேண்டும். அதே நேரத்தில், இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌, சுருக்கெழுத்து தட்டச்சர்‌, நேர்முக எழுத்தர், உதவியாளர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு 18 வயது நிறைந்திருந்தால் போதுமானது.</p>
<p>அதே நேரத்தில் உச்ச வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மாற்றுத் திறனாளிகளுக்கு 42 ஆகவும் முன்னாள் ராணுவத்தினருக்கு 50 ஆகவும் கைம்பெண்களுக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.</p>
<h2><strong>கல்வித் தகுதி</strong></h2>
<ul>
<li>10ஆம் வகுப்புத் தேர்ச்சி</li>
<li>பொதுக் கல்வித் தகுதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.</li>
<li>தட்டச்சர் பணிகளில் சேர, அரசு தொழில்நுட்ப தமிழ் அல்லது ஆங்கிலத் தட்டச்சுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.</li>
</ul>
<h2><strong>தேர்வு முறை</strong></h2>
<p>ஓஎம்ஆர் முறையில் குரூப் 4 தேர்வு நடத்தப்படும்.</p>
<p>பகுதி அ- தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு – 150 மதிப்பெண்களுக்கு</p>
<p>பகுதி ஆ – பொது அறிவு</p>
<p>பகுதி இ – திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவு – ஆ, இ இரண்டும் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு</p>
<h2><strong>விண்ணப்பிப்பது எப்படி?</strong></h2>
<ul>
<li>தேர்வர்கள் முதலில் <a href="https://www.tnpsc.gov.in/">https://www.tnpsc.gov.in/</a> என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.</li>
<li>ஒரு முறைப் பதிவில் பதிவு செய்த பின்பு, விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்க வேண்டும். அதில் பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்திருக்க வேண்டும்.</li>
<li>அதேபோல ஒரு முறைப் பதிவுடன் ஆதாரை இணைக்க வேண்டும்.</li>
<li>தொடர்ந்து APPLY என்ற பகுதியைச் சொடுக்கி, போதிய விவரங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.</li>
</ul>
<h2><strong>பாடத்திட்டம்</strong></h2>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/04/25/b67a290786edb1374bcd2ab6cd91cdeb1745581049843332_original.jpg" /></p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/04/25/e0cd6b6f063569905c1ab09a91c3018f1745581075935332_original.jpg" /></p>
<p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/04/25/e69096bb9c4c869eb010ff7fce1c09e31745581097548332_original.jpg" /></p>
<p>முழு விவரங்களை <a href="https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20IV%20Tamil.pdf">https://tnpsc.gov.in/Document/tamil/Grp%20IV%20Tamil.pdf</a> என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.</p>