TNPSC Group 2: நாளை மறுநாள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு: தேர்வர்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு..!

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாடு அரசுப்பணியாசார்&zwnj; தேர்வாணையம்&zwnj; சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப்&zwnj; பணிகள்&zwnj; தேர்வு குரூப் 2 உள்ளடங்கிய பதவிகளுக்கான நேரடி நியமனத்திற்கான பொதுவான முதல்நிலைத்&zwnj; தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி ( நாளை மறுநாள் ) நடைபெற உள்ளது.</p> <p>&rsquo;&rsquo;தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்&zwnj; தேர்வுக்கூட நுழைவுச்&zwnj; சீட்டு தேர்வாணையத்தின்&zwnj; இணையதளமான&nbsp;https://www.tnpsc.gov.in/&nbsp;ல்&zwnj; பதிவேற்றம்&zwnj; செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்&zwnj; தங்களது விண்ணப்ப எண்&zwnj; மற்றும்&zwnj; பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச்&zwnj; சீட்டினைப் பதிவிறக்கம்&zwnj; செய்து கொள்ளலாம்&zwnj; என அறிவுறுத்தப்பட்டுள்ளது. &nbsp;</p> <p>இந்நிலையில் , 2,763 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.</p> <p><strong>குரூப் 2 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு:&nbsp;</strong></p> <p>காலை 8.30 வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p> <p>காலை 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்களுக்கு அனுமதியில்லை</p> <p>தேர்வு தொடங்கும் நேரம்: காலை 9.30 மணி</p> <p>அனைத்து தேர்வர்களும்&zwnj; மேலே குறிப்பிட்டுள்ளபடி, சரியான நேரத்திற்கு முன்பே தேர்&zwnj;வுக் கூடத்திற்குள் இருக்க வேண்டும்&zwnj;. சலுகை நேரத்திற்குப்&zwnj; பிறகு எந்த ஒரு தேர்வரும்&zwnj; தேர்வு அறைக்குள்&zwnj; நுழைய அணுமதிக்கப்படமாட்டார்&zwnj;. தேர்வு நேரம்&zwnj; முடியும்&zwnj; வரை தேர்வர்&zwnj; யாரும்&zwnj; தேர்வு அறையை விட்டு வேளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்&zwnj;.</p> <p>தேர்வர்கள்&zwnj; தேர்வாணையத்தின்&zwnj; இணையதளத்தில்&zwnj; இருந்து பதிவிறக்கம்&zwnj; செய்யப்பட்ட அனுமதிச்&zwnj; சீட்டுடன் (Hall Ticket) வர வேண்டும்&zwnj;. தவறினால்&zwnj; தேர்வர்&zwnj; தேர்வில்&zwnj; கலந்து கொன்ன அணுமதிக்கப்பட மாட்டார்&zwnj;.</p> <p>&nbsp;தேர்வர்&zwnj; தங்களுடைய ஆதார்&zwnj; அட்டை, கடவுச்சீட்டு (PASSPORT) , ஓட்டுநர்&zwnj; உரிமம்&zwnj; , நிரந்தர கணக்கு எண்&zwnj; அட்டை, வாக்காளர்&zwnj; அடையாள அட்டை இவற்றில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.</p> <p>* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்&zwnj;, தேர்வரின்&zwnj; புகைப்படம்&zwnj; அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது &zwnj; தோற்றத்துடன்&zwnj; பொருந்தவில்லை என்றால்&zwnj; தேர்வர்&zwnj; தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்&zwnj; ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில்&zwnj; ஒட்டி, அதில்&zwnj; தனது பெயர்&zwnj;, முகவரி. பதிவு எண்ணை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு. ஹால் டிக்கெட்&zwnj; ஒளிநகல்&zwnj; மற்லும்&zwnj; ஆதார்&zwnj; அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர்&zwnj; உரிமம்&zwnj; , நிரந்தரக் கணக்கு அட்டை, வாக்காளர்&zwnj; அடையாள அட்டை, இவற்றில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றின்&zwnj; ஒளிநகலை அதனை தலைமைக்&zwnj; கண்காணிப்பாளரிடம்&zwnj; சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும்&zwnj; பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்&zwnj;.</p> <p>* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்&zwnj;, தேர்வர்&zwnj; பெயர்&zwnj; உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்&zwnj; உறுதிப்படுத்திக்&zwnj;கொள்ள வேண்டும்&zwnj;. அதில்&zwnj; ஏதேனும்&zwnj; முரண்பாடு இருந்தால்&zwnj;, உடனடியாக மின்னஞ்சல் ([email protected]) மூலம் தெரிவிக்கலாம்&zwnj;.</p> <p>* தேர்வர்கள்&zwnj; கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்&zwnj; பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்&zwnj;.</p> <p>* மின்னணு சாதனங்களான அலைபேசி மற்றும்&zwnj; புத்தகங்கள்&zwnj;, குறிப்பேடுகள்&zwnj;, கைப்பைகள்&zwnj;. மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள்&zwnj; போன்றவற்றுடன்&zwnj; தேர்வு அறைக்குள்&zwnj; நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்&zwnj;. எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக்&zwnj; கொண்டு வர வேண்டாம்&zwnj; என்று தேர்வர்கள்&zwnj; அறிவுறுத்தப்படுகிறார்கள்&zwnj;.</p> <p>* அறிவிக்கையில்&zwnj; குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றினை மீறினால்&zwnj; அவர்தம் விண்ணப்பம்&zwnj; நிராகரிக்கப்படலாம்&zwnj;, அவரது விடைத்தாள்&zwnj; செல்லாதது ஆக்கப்படலாம்&zwnj; அல்லது தேர்வாணையத்தால்&zwnj; விதிக்கப்படும்&zwnj; வேறு ஏதேனும்&zwnj; அபாரதத்திற்கும்&zwnj; உள்ளாக நேரிடும்&zwnj;</p>
Read Entire Article