TNPSC Group 2 Exam 2024: நாளை குரூப் 2, 2ஏ தேர்வு; தேர்வர்கள் என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது? வழிமுறைகள் இதோ!

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாடு முழுவதும் நாளை குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் நிலையில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p> <p>கடந்த ஜூன் மாதம் 2024ஆம் ஆண்டுக்கான குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியானது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.&nbsp;இதையடுத்து குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு நாளை தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில்&zwnj; உள்ள அனைத்து மாவட்டங்களிலும்&zwnj; 2,763 தேர்வு மையங்களில் தேர்வர்கள்&zwnj; எழுத உள்ளனர்&zwnj;.</p> <h2><strong>பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்</strong></h2> <p>இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும்&zwnj; மாவட்ட ஆட்சித்&zwnj; தலைவர்கள்&zwnj; தலைமை ஒருங்கிணைப்பாளராகவும்&zwnj;, மாவட்ட வருவாய்&zwnj; அலுவலர்கள்&zwnj; இணை ஒருங்கிணைப்பாளராகவும்&zwnj; செயல்படுவார்கள்&zwnj;. தேர்வினை கண்காணிக்கும்&zwnj; பொருட்டு துணை ஆட்சியர்&zwnj; நிலையில்&zwnj; பறக்கும்&zwnj; படை அமைக்கப்பட்டுள்ளது.</p> <p>மேலும்&zwnj;, ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும்&zwnj; ஆய்வு அலுவலர்&zwnj; ஒருவரும்&zwnj; மாவட்ட ஆட்சியர்&zwnj; அலுவலகம்&zwnj; மூலம்&zwnj; நியமிக்கப்பட்டுள்ளார்&zwnj;.</p> <p>மொத்தமுள்ள 2763 தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள்&zwnj; மற்றும்&zwnj; கண்காணிப்பாளர்கள்&zwnj; (2௦ தேர்வர்களுக்கு ஒருவர்&zwnj;) நியமிக்கப்பட்டுள்ளனர்&zwnj;. தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும்&zwnj; செய்யப்பட்டுள்ளன.</p> <h2><strong>தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு</strong></h2> <p>தேர்வு நடைபெறும்&zwnj; நாளன்று தேர்வின்&zwnj; அனைத்து நடவடிக்கைகளும்&zwnj; Videograph செய்ய உரிய ஏற்பாடுகள்&zwnj; மேற்கொள்ளப்பட்&zwnj;டுள்ளன.</p> <p>விண்ணப்பதாரர்கள்&zwnj; தேர்வு மையத்தினை எளிதில்&zwnj; அடைவதற்கு எதுவாக போக்குவரத்து துறையின்&zwnj; மூலம்&zwnj; சிறப்பு பேருந்து வசதிகள்&zwnj; ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின்&zwnj; பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு அனைத்து மையத்திற்கும்&zwnj; காவலர்கள்&zwnj; நியமிக்கப்பட்டுள்ளனர்&zwnj;.</p> <p>மேலும்&zwnj;, தேர்வு நடைபெறும்&zwnj; நாளன்று தடையில்லா மின்சாரம்&zwnj; வழங்குவதற்கு மின்வாரியத்&zwnj; துறைக்கு உரிய அறிவுரைகள்&zwnj; வழங்கப்பட்டுள்ளான.</p> <p>விண்ணப்பதாரர்களின்&zwnj; உடல்&zwnj; நலன்&zwnj; கருதி 108 ஆம்புலன்ஸ்&zwnj; உள்ளிட்ட மருத்துவ வசதிகள்&zwnj; வழங்க சுகாதாரத்துறைக்கு அறிவுரைகள்&zwnj; வழங்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள்&zwnj; செய்யப்பட்டுள்ளன.</p> <h2><strong>எப்போது செல்ல வேண்டும்?</strong></h2> <p>விண்ணப்பதாரர்கள்&zwnj; நுழைவுச் சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு 09.00 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். 09.00 மணிக்கு மேல்&zwnj; வரும்&zwnj; விண்ணப்பதாரர்கள்&zwnj; எக்காரணம்&zwnj; கொண்டும்&zwnj; தேர்வு மையத்தில்&zwnj; நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்&zwnj;. மேலும்&zwnj; தேர்வு நேரம்&zwnj; முடியும்&zwnj; வரை தேர்வர்&zwnj; யாரும்&zwnj; தேர்வு அறையை விட்டு வேளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்&zwnj;.</p> <p>தேர்வு தொடங்கும் நேரம்: <strong>காலை 9.30 மணி</strong></p> <h2><strong>எதற்கு அனுமதி?</strong></h2> <p>* இந்த தேர்விற்குரிய தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (Hall Ticket) கட்டாயம்&zwnj; தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச்&zwnj; செல்ல வேண்டும்&zwnj;. மாறாக வேறெந்த ஆவணமும்&zwnj; அனுமதிக்கப்படாது.</p> <p>* தேர்வர்&zwnj; தங்களுடைய ஆதார்&zwnj; அட்டை, கடவுச்சீட்டு (PASSPORT) , ஓட்டுநர்&zwnj; உரிமம்&zwnj; , நிரந்தர கணக்கு எண்&zwnj; அட்டை, வாக்காளர்&zwnj; அடையாள அட்டை இவற்றில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றின் ஒளிநகலை கொண்டு வர வேண்டும்.</p> <p>* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்&zwnj;, தேர்வரின்&zwnj; புகைப்படம்&zwnj; அச்சிடப்படவில்லை அல்லது தெளிவாக இல்லை அல்லது &zwnj; தோற்றத்துடன்&zwnj; பொருந்தவில்லை என்றால்&zwnj; தேர்வர்&zwnj; தன்னுடைய கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்&zwnj; ஒன்றினை ஒரு வெள்ளை காகிதத்தில்&zwnj; ஒட்டி, அதில்&zwnj; தனது பெயர்&zwnj;, முகவரி. பதிவு எண்ணை குறிப்பிட்டு முறையாகக் கையொப்பமிட்டு. ஹால் டிக்கெட்&zwnj; ஒளிநகல்&zwnj; மற்லும்&zwnj; ஆதார்&zwnj; அட்டை, கடவுச் சீட்டு, ஓட்டுநர்&zwnj; உரிமம், நிரந்தரக் கணக்கு அட்டை, வாக்காளர்&zwnj; அடையாள அட்டை, இவற்றில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றின்&zwnj; ஒளிநகலை அதனை தலைமைக்&zwnj; கண்காணிப்பாளரிடம்&zwnj; சரிபார்க்கப்பட்டு மேலொப்பமிடும்&zwnj; பொருட்டு சமர்ப்பிக்க வேண்டும்&zwnj;.</p> <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/13/e884acd7072c763f32a3b613a720566a1726207058816332_original.jpg" /></p> <p>* தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில்&zwnj;, தேர்வர்&zwnj; பெயர்&zwnj; உள்ளிட்ட அனைத்து விவரங்களையும்&zwnj; உறுதிப்படுத்திக்&zwnj;கொள்ள வேண்டும்&zwnj;. அதில்&zwnj; ஏதேனும்&zwnj; முரண்பாடு இருந்தால்&zwnj;, உடனடியாக மின்னஞ்சல் ([email protected]) மூலம் தெரிவிக்கலாம்&zwnj;.</p> <p>* தேர்வர்கள்&zwnj; கருமைநிற மை கொண்ட பந்துமுனைப்&zwnj; பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும்&zwnj;.</p> <h2><strong>எதற்கு அனுமதி இல்லை?</strong></h2> <p>* மின்னணு சாதனங்களான அலைபேசி மற்றும்&zwnj; புத்தகங்கள்&zwnj;, குறிப்பேடுகள்&zwnj;, கைப்பைகள்&zwnj;. மற்ற அனுமதிக்கப்படாத பொருட்கள்&zwnj; போன்றவற்றுடன்&zwnj; தேர்வு அறைக்குள்&zwnj; நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்&zwnj;. எனவே, தடை செய்யப்பட்ட பொருட்களைக்&zwnj; கொண்டு வர வேண்டாம்&zwnj; என்று தேர்வர்கள்&zwnj; அறிவுறுத்தப்படுகிறார்கள்&zwnj;.</p> <p>* அறிவிக்கையில்&zwnj; குறிப்பிடப்பட்டுள்ள அறிவுரைகளில்&zwnj; ஏதேனும்&zwnj; ஒன்றினை மீறினால்&zwnj; அவர்தம் விண்ணப்பம்&zwnj; நிராகரிக்கப்படலாம்&zwnj;. அவரது விடைத்தாள்&zwnj; செல்லாதது ஆக்கப்படலாம்&zwnj; அல்லது தேர்வாணையத்தால்&zwnj; விதிக்கப்படும்&zwnj; வேறு ஏதேனும்&zwnj; அபாரதத்திற்கும்&zwnj; உள்ளாக நேரிடும்&zwnj;.</p> <p>இவ்வாறு <a title="டிஎன்பிஎஸ்சி" href="https://tamil.abplive.com/topic/tnpsc" data-type="interlinkingkeywords">டிஎன்பிஎஸ்சி</a> தெரிவித்துள்ளது.</p> <p>கூடுதல் விவரங்களுக்கு: <a href="https://www.tnpsc.gov.in/">https://www.tnpsc.gov.in/</a></p> <p>&nbsp;</p>
Read Entire Article